2025 ஜூன் 25, புதன்கிழமை

இறுதித் தவணைப் பரீட்சை புள்ளிகளை பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 10 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 2010ஆம் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதித் தவணைப் பரீட்சையில் மாணவர்களின் புள்ளிகளை பகுப்பாய்வு செய்து ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது

கடந்த இரு வருடங்களிலும் 9ஆம்  10ஆம் தரங்களில் நடைபெற்ற முதல்மொழி, கணிதம், ஆங்கிலம், வரலாறு, விஞ்ஞானம் ஆகிய ஐந்து பாடங்களிலும் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் விபரங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு சகல வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுப்பாய்வு அறிக்கையை மையமாக வைத்து புதிய கல்வி ஆண்டில் மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய கல்வி நுட்பங்கள் குறித்து செயற்றிட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • *****MGKSIRO***** Tuesday, 10 January 2012 04:43 PM

    நல்ல விடயம் .........

    Reply : 0       0

    UMMPA Tuesday, 10 January 2012 07:46 PM

    யார் யாரெல்லாம் நிருவகிப்பவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் நிருவகக்கட்டமைப்பு புதிய வடிவமைப்பை பெற்றுக்கொள்ளும். எனவே, இப்போது கூடுதலான பாடசாலைகள் கணனியுடன் இருக்கிறது. அதனை தினமும் பதிவிடல் செய்தால் போதும். நிருவாகக் கட்டமைப்பை எங்கு இருந்தாவது இயக்கமுடியும். தயவு கூர்ந்து இதுவெல்லாம் பத்திரிகைக்கு விளம்பரப்படுதுவதை தவிர்த்து தினமும் கணணி வேலைக்கு அமர்தப்படவர்களுக்கு அவர்களின் வேலை என்ன ,தினமும் எந்தளவு அவர்களால் பயன்பெறமுடியும் . இதுதான் முக்கியம்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .