Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 10 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் நெற்பயிர்களிடையே 'பன்றிச் சம்பா' எனும் கலப்பின நெற்பயிரின் பெருக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
'பன்றிச் சம்பா' எனும் இந்த நெல்லினம் நெற்பயிர்களிடையே அதிகமாகப் பெருகி வருவதோடு, இவற்றின் வளர்ச்சியும் அதீதமாக உள்ளமையினால் நெற்பயிர்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, நெல் வயல்களிலுள்ள 'பன்றிச் சம்பா'வின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்தும் வகையில் - மனித வளங்களைப் பயன்படுத்தி அவற்றினை அறுத்து அகற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும், இவற்றின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நெற்பயிர்களிடையே வளரும் களைகளை இல்லாதொழிப்பதற்காக அவற்றுக்கென சிபாரிசு செய்யப்பட்டுள்ள களைநாசினிகளை – தாம் பயன்படுத்தி வருகின்றபோதும், அதற்குரிய பயன்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நெல் வயல்களில் தற்போது - மஞ்சட்கோரை, நரி மாறத்து மற்றும் குதிரைவாற் புல் போன்றவை பெருகிக் காணப்படுவதாகவும், ஆனால் - இந்தக் களைகளை அழிப்பதற்காகச் சிபாரிசு செய்யப்பட்டுள்ள களைநாசினிகளை தாம் பயன்படுத்தி வருகின்ற போதும், குறித்த களைகள் அழிவடையாமல் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக – களைநாசினி உற்பத்தி நிறுவனங்களின் முகவர்களிடம் தாம் முறையிட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
pasha Wednesday, 11 January 2012 02:22 PM
வீதியில் வீசாமல் பன்றி சம்பா சாப்பிடும் மக்களுக்கு வழங்குங்கள்.
Reply : 0 0
sutha Thursday, 12 January 2012 07:41 PM
நல்லா சொன்னிங்க பாஷா. எத்தனியோ மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்காங்க.
Reply : 0 0
Nanavanillai Thursday, 12 January 2012 09:27 PM
பாஷா, உங்களுக்கும் எட்டுங்கோ
Reply : 0 0
najath Saturday, 14 January 2012 03:22 AM
என்னதான் சொல்லுறீங்க, ஒன்றுமே விளங்க
இல்லையே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
1 hours ago