Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 10 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமை சித்தி பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்.
உயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற எம்.எம்.பாத்திமா ஸியாதா, கணித துறையில் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்ற ஏ.எம்.சிரின் சனூபர் மற்றும் கலை பிரிவில் மூன்று பாடங்களிலும் 'ஏ ' சித்தி பெற்ற கே. ஹம்ஸியா காலித் ஆகிய மாணவிகளே கௌரவிக்கப்பட்டனர்.
செம்பகம் Tuesday, 10 January 2012 10:25 PM
வாழ்த்துக்கள் பலகோடிங்கோ..
Reply : 0 0
meenavan Tuesday, 10 January 2012 10:30 PM
பெற்றோர்கள் முன்னிலையில் அதி திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளை கௌரவித்த அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Doc - KSA Tuesday, 10 January 2012 11:02 PM
Excellent, congrates. Let other fellow their footsteps.
Reply : 0 0
ummpa Tuesday, 10 January 2012 11:21 PM
அன்பான அதிபர் அவர்களே ! நல்ல விடயம் இருந்தாலும் இந்த விடயத்தில் மூன்றுபாடங்கள் சித்தி அடைந்து பல்கலைகழகத்துக்கு தெரிவான அனைபேரையும் பாராட்டுங்கள். சில நேரம் இந்த மாணவிகளைவிட திறமையானவர்கள் அந்த நேரத்தில் சில தவறுகளை விட்டு 3A எடுக்காமல் விட்டு இருக்கலாம் . எனவே, அவர்களும் விடுபடாமல் பாராட்டி இருந்தால் அது மிகவும் அன்பாக இருந்து இருக்கும். பெருமைக்குரிய பெற்றர்களுக்கு . வாழ்த்துக்கள் .
Reply : 0 0
kalmunaiyaan Wednesday, 11 January 2012 12:31 AM
இந்த தெரிவு சரியா இல்லங்க ......
Reply : 0 0
janoovar Wednesday, 11 January 2012 03:09 AM
மாணவர்கள் இப்படியான பாராட்டு வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அவர்களுக்கு தம்மீது வைத்துள்ள நம்பிக்கை இன்னும் பல மடங்காகும். அது தவிர அடுத்து வருடங்களில் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்கள் உத்வேகத்துடன் படிப்பார்கள் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
mohamed Wednesday, 11 January 2012 06:24 AM
இலங்கை முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் கல்முனையின் இரு கண்களான கல்முனை பாளிகாவும் ஸாஹிரா கல்லூரியும் சிறந்த சாதனைகளை ஏற்படுத்தியுள்ளன. இரு கல்லூரிகளுக்கும் வாழ்த்துக்கள்
Reply : 0 0
pasha Wednesday, 11 January 2012 02:19 PM
ஆமை நூறு முட்டை போட்டு சும்மா இருக்கும். கோழி ஒரு முட்டை போட்டு கூவிக்கொண்டு திரியும். அது போல் தான்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 11 January 2012 04:14 PM
mr .jmmpa சொன்ன கருத்து சரியானது எல்லோரயும் கௌரவிங்க அப்போ இன்னும் நல்லா இருக்கும் ..... எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
Reply : 0 0
BOOS Wednesday, 11 January 2012 05:48 PM
'பெண்ணெல்லாம் பரிச்சையிலே முதலிடந்தாங்க
நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்க விட்டாங்க '
Reply : 0 0
kulathooran Wednesday, 11 January 2012 07:02 PM
அரசியலாளர்களை முன்னிறுத்தி மாணவிகளை கௌரவிப்பதை விட அப்பாடசாலையின் புகழ் ஒங்க காரணமாக இருக்கும் புகழ் பூத்த பழைய மாணவியரை கொண்டு கௌரவிப்பை செய்திருந்தால்,இன்னும் நேர்த்தியாக அமைந்திருக்கும்.
Reply : 0 0
ummpa Wednesday, 11 January 2012 07:33 PM
kulathooran உங்கள் கருத்து ஏற்றுகொள்ளவேண்டியது. அங்கு தம்பி pasha என்ன சொல்லவருகிறார் என்பதை கொஞ்சம் புரியும்படி கூறுங்கள் மற்றவர்களுக்கும் புரியும்.
***மல்லிகை சிராஜ்***சிரோ உங்களுக்கு எனது நன்றி.
Reply : 0 0
pasha Wednesday, 11 January 2012 09:16 PM
உம்பா, எனது கருத்துக்கள் அரைவாசி வெட்டபட்டு வருவதால் உங்களுக்கு சிறு குழப்பம் எட்படும். தமிழ் மிரர் ஏன் சிலவற்றை முற்றாக பிரசுரிபதில்லை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
1 hours ago