2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை மாநகர ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி

Super User   / 2012 ஜனவரி 13 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் கடந்த புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, பல வருடங்களாக கல்முனை மாநகர சபையில் நிலவிவந்த ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வதாக ஆளுநர் உறுதியளித்தார் என கல்முனை மேயர் சிராஸ் தெரிவித்தார்.

இதன்போது, கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • alaqsa Saturday, 14 January 2012 04:27 PM

    முதல்வருக்கு வாழ்த்துக்கள். அதேவேளை இதற்கு முன் இருந்த முதல்வர்களுக்கு ஆளுநர் போன்றவர்களை சந்திக்கும் வழிமுறைகள் தெரிந்திருக்கவில்லையோ!

    Reply : 0       0

    kulathooran Saturday, 14 January 2012 07:14 PM

    முதல்வரே களத்தில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள். என்றாலும் தென் எல்லை கேட் வே (Gate way) விடயத்தில் செயற்பட முடியாமல் உள்ளதுதான் புரியாமல்லுள்ளது.

    Reply : 0       0

    jasmin Saturday, 14 January 2012 08:28 PM

    மேயரே! இது போன்ற செயற்பாடுகளில் பிரதி மேயர் நிசாம் காரியப்பரை இணைத்து செயற்பட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் இன்னும் பிரச்சினை தொடரும்.

    Reply : 0       0

    kulathooran Saturday, 14 January 2012 10:49 PM

    jasmin பிரிட்டிஷ் தூதுவரை மேயர், பிரதி மேயர் தனி தனியாக சந்திக்க முடியுமென்றால் ஏன் ஆளுனரை சந்திக்க முடியாது?

    Reply : 0       0

    mbm Monday, 16 January 2012 05:25 PM

    ஜெஸ்மின், குழப்புவது எப்படி என்று சிந்திக்காமல் மேயரை வாழ்த்துங்கள்! பொறாமை, குறுகிய மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, ஓர வஞ்சனை இது தன்னைத்தானே விரைவாக அழித்துவிடும். நல்லது செய்யும் எண்ணம் இருந்தால் நிசாம் காரியப்பரால் முடியுமானதை அவரும் செய்யட்டும்! எப்படியோ ஊர் வளம் பெற்றால் போதும் என்று நினைப்பதுதான் ஊர்ப்பற்று உள்ளவரின் உண்மையான செயலாகும். அதை விடுத்து தான் மட்டுமே பேர் வாங்கவேண்டும் என்பது ஒரு சமூக சேவகனின் செயலல்ல. நானும் கல்முனையூராந்தான். நானும் நிசாம் சாருக்கு வோட்டு போட்டவன்தான்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .