2025 ஜூன் 25, புதன்கிழமை

தையல் பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 ஜனவரி 13 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட தையல் பயிற்சிகளை முடித்துக் கொண்ட யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளாரும் உலக உணவு திட்டத்தின் மாவட்ட நிறைவேற்று அதிகாரியுமான எஸ்.அன்வர்டீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 400 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .