2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் - கல்முனை மேயர் சந்திப்பு

Super User   / 2012 ஜனவரி 14 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை கடந்த புதன்கிழமை திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கல்முனை மாநகர அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பாக இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதுடன் நெல்சிப் திட்டத்தின் மூலம் கல்முனை மாநகரத்தில்  மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • irfan Sunday, 15 January 2012 07:02 PM

    எப்போதுதான் இந்தச் சின்னப் புள்ளைத் தனமான சந்திப்பக்களை விடப் போகின்றீர்களோ

    Reply : 0       0

    mohamed Tuesday, 17 January 2012 08:18 PM

    கல்முனை அபிவிருத்தியைப் பற்றிப் பேசும் இடத்தில் . மருதூர் மஜீத் எதற்கு? புல்லாங் குழல் வாசிக்கவா?

    Reply : 0       0

    sameen Tuesday, 17 January 2012 08:14 PM

    இப்போது கலாநிதி ஸிராஸ் அடுத்தது டாக்டர் ஸிராஸ்.

    Reply : 0       0

    nimsath Monday, 16 January 2012 06:09 PM

    poramai paduvaverkal poramaip padukkonday irukaddum. ungal paniyai thodernthu salikkamal saiungal. neengalthan adutha paaralumanra uruppinar.

    Reply : 0       0

    rukasan Monday, 16 January 2012 06:14 AM

    வாழ்த்துக்கள்.....அடுத்த முஸ்லிம் காங்கிஸ் தலைவர் நீங்கள்தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்கள் பணி தொடரட்டும்

    Reply : 0       0

    kulathooran Monday, 16 January 2012 05:42 AM

    மேயர் அவர்களே, ஊர் பாராட்டு விழாவில் தலைவர் கூறியதை ஞாபகமூட்டுகிறேன் அரசியல் சாக்கடையில் நீங்கள் படிக்கவேண்டியது அதிகம்.ஆளுநர்,முதலமைச்சர் சந்திப்பில் மாநகர உறுப்பினர்களின் குழுவுடன் சென்றிருந்தால் காத்திரமான பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும்.

    Reply : 0       0

    Majeed Monday, 16 January 2012 01:03 AM

    இந்தப் பெருமையோடு கல்வி கற்காமலேயே கலாநிதி என்ற பெருமையும் சேரும்.

    Reply : 0       0

    Marothoor A.M.R Sunday, 15 January 2012 11:41 PM

    பொறாமை பிடித்த எமது சமூகத்தை திருத்தவே முடியாது... மேயரே உங்கள் தனி பாதையில் செல்லுங்கள், வெற்றி நமதே...

    Reply : 0       0

    pottuvilan Sunday, 15 January 2012 09:13 PM

    மிஸ்டர் முஹம்மத்... யாருடனும் பேசவேண்டாம் என்கிறீர்களா? என்ன கொடுமை இது, நடு நிலையோடு கமெண்ட் பண்ணவும்.

    Reply : 0       0

    jasmin Saturday, 14 January 2012 08:30 PM

    மேயரே! இது போன்ற செயற்பாடுகளில் பிரதி மேயர் நிசாம் காரியப்பரை இணைத்து செயற்பட்டால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் இன்னும் பிரச்சினை தொடரும்.

    Reply : 0       0

    jasim Sunday, 15 January 2012 06:46 PM

    கல்முனை தமிழ் பிதேச வீதிகளை திருத்துவதற்கு மாநகர சபையில்தான் இடமில்லை நெல்சிப் திட்டத்திலாவது இடம் இருக்கா என்று பாருங்கள் மேயரே

    Reply : 0       0

    zimer Sunday, 15 January 2012 06:21 PM

    அன்று முதல் இன்று வரை சந்திப்புக்கள் மட்டும்தானோ. அபிவிருத்தி இல்லையோ. சந்திப்புக்களுக்கு சாதனை படைத்தது இருக்கட்டும் கல்முனையை அபிவிருத்தி செய்வதில் சாதனை படையுங்கள்

    Reply : 0       0

    raaji Sunday, 15 January 2012 06:10 PM

    இந்த வருடம் கல்முனை மேயரின் சந்திப்பு வருடம்...

    Reply : 0       0

    AHAMED JUNAID Sunday, 15 January 2012 06:10 PM

    எதிர்காலத்தில் உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் யாரையாவது சந்திப்பதாக இருக்கும் பட்சத்தில் சபை அங்கீகாரத்தை பெறுவதுடன் சபையில் ஒரு குழுவினரையும் அழைத்து செல்வது பிரச்சினை தோன்றாமல் இருப்பதற்கு வழியமைக்கும் இல்லையேல் தன்தோன்றித்தனமாக செயல்படுவதாக முடியும்.

    Reply : 0       0

    Mohamed Osama Sunday, 15 January 2012 03:33 AM

    அதி கூடிய சந்திப்புக்களை நடாத்தி சாதனை படைத்த ஸிராஸ் இலங்கை மாநகர சபைகளுல் குறுகிய காலத்திற்குல் அதி கூடிய சந்திப்புக்கள் நடாத்தி சாதனை படைத்த பெருமை கல்முனை மேயருக்கு மட்டுமே.

    Reply : 0       0

    iya Sunday, 15 January 2012 01:55 AM

    கிட்டங்கி பாலம் எங்கு இருக்கிறது என்று முதலமைச்சருக்கு தெரியுமா ? நான்கு வருடகாலத்தில் என்ன செய்தீர்கள் ?அடுத்தவாண்டு நடைபெறவிருக்கும் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சராவது எப்படி என்று யோசிக்கிறீர்கள். நீங்கன் வாழ்வில் இனிமேல் முதலமைச்சராகமுடியது. என்பதை நினைவில் நிறுத்துங்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பே வெற்றி பெரும் .

    Reply : 0       0

    majeed Sunday, 15 January 2012 01:47 AM

    குறுகிய அரசியல் நோக்கத்தையும் சிந்தனையும் விட்டுட்டு செயற்படவும். ஏனைய முக்கியஸ்தர்களையும் இணைத்துக்கொண்டு செயற்படவும் வெற்றி நிச்சயம்.

    Reply : 0       0

    meenavan Saturday, 14 January 2012 09:06 PM

    எந்த வகையான அபிவிருத்திகளை வினைத்திறனுடன் செய்வது என்பது கலந்துரையாடினிர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .