Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 16 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருக்கோவில், கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போயுள்ளார் என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார்.
கஞ்சிக்குடியாறு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரான 62 வயதுடைய செல்லத்துரை நடேசப்பிள்ளை என்பவரே காணாமல் போயுள்ளார். இவர் சம்பவதினம் மாலை 5 மணிக்கு வழமைபோல கஞ்சிக்குடியாறு குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் இரவு 7 மணியாகியும்
வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர்.
இதன்போது குளத்தின் கரையில் கல் ஒன்றின் மீது வலை இருப்பதையும் தோணி தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர். இருப்பினும் குறித்த மீனவரை எங்கு தேடியும் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
பொலிசார் அங்கு தேடுதல் நடத்தி அவரைக் கண்டுபிடிக்கவில்லை எனவும் சிலவேளை இவரை முதலை கடித்து இழுத்துச் சென்றிருக்கலாம் எனவும் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து இப்பதால் கடற்படையின் உதவியுடன் குளத்தில் தேடுதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago