Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
இம்மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதிவரை அனுஸ்டிக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதற்கமைவாக கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கல்முனை நகர், இஸ்லாமபாத் பிரிவுகளில் இன்று டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.
இன்றைய நடவடிக்கைகளின் போது இப்பிரதேசங்களில் 47 இடங்களில் டெங்கு பரவும் அபாய நிலை காணப்பட்டதுடன், ஒரு இடத்தில் டெங்கு நுளம்புகள் உருவாக்கத்திற்கான குடம்பிகள் இனங்காணப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு நபருக்கெதிராக நாளை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கம் செய்ய உள்ளதாக அறியமுடிகிறது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொலிஸார் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago