2025 ஜூன் 25, புதன்கிழமை

ஆலையடிவேம்பில் பட்டிப்பொங்கல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 17 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் பட்டிப்பொங்கல் முதல்த் தடவையாக அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கண்ணகிபுரம் முருகன் ஆலய வளாகத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இப்பட்டிப்பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா, மட்டு. போரதீவு காளிகோவில் பிரதம குருவான காந்தன் குருக்கள், அமைச்சின் செயலாளர் பத்மநாதன், கால்நடை திணைக்கள மாகாண பணிப்பாளர் தியாகராஜன், மாவட்டப் பணிப்பாளர் யுனைத்தீன், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி
பணிப்பாளர் வா.குணாளன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ந.தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அலங்காரப் போட்டியில் வெற்றி பெற்ற பண்ணையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .