Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை, தாண்டியடி பிரதேசம் மற்றும் அதன் அண்மை கிராமமான சங்கமன் கண்டி ஆகிய பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதிகளிலுள்ள பல குடியிருப்பிடங்கள் அண்மைக்காலமாக யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி வருவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இக்கிராமங்களின் எல்லைகளில் மின்சார வேலிகள் அமைக்கப்படுமாயின் யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தாம் தப்பிக்க முடியும் என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஓரிரு வாரங்களில் மட்டும் தாண்டியடி மற்றும் சங்கமன்கண்டி ஆகிய கிராமங்களிலுள்ள பல வீடுகள் யானைகளின் தாக்குதலுக்குள்ளாகியதோடு, அங்கிருந்த பொருட்களும் யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்துக்குள் நுழைந்த யானையொன்று, ஆலயத்தின் கதவுகளை உடைத்து, கோயிலுக்குள் இருந்த தளபாடங்கள் மற்றும் ஏனைய பொருட்களினையும் சேதமாக்கிச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago