2025 ஜூன் 25, புதன்கிழமை

சம்மாந்துறையில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை பிரதேசத்தில் அடையாள அட்டை மற்றும் பிறப்புச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அதனை துரிதமாக பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் விசேட நடமாடும் சேவை ஒன்று இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவை சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராமங்களை நான்கு வலயங்களாக பிரித்து நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. முதாலாவது நிகழ்வு ஏ வலயத்துக்கு இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

பீ - வலயத்துக்கு எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்திலும்,  சீ - வலயத்துக்க 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும்,  டி – வலயத்துக்கு 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.

இந்நடமாடும் சேவையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள், தபால் நிலைய அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .