Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 20 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கின் பழம் பெரும் கல்லூரியான கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் பாத்திமா அன்னையின் திருச்சுரூபம் நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் அமைக்கப்பட்ட இத்திருச்சுரூபத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் திருகோணமலை மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளருமான அருட்பணி.பேராசிரியர் த.சிறீதரன் சில்வெஸ்ரர் கலந்து கொண்டார். கல்முனை மறைக்கோட்ட குருமுதல்வரும் திரு இருதயநாதர் ஆலயப் பங்குத்தந்தையுமான அருட்பணி யூட் ஜோன்சன், கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் ஸ்ரீபன் மத்தியூ, பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாத்திமா அன்னையின் திருச்சுரூபம் கல்லூரியின் பழைய மாணவரும் திருகோணமலை மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர் அருட்பணி. பேராசிரியர் த.சி.சில்வெஸ்ரினால் திறந்து வைக்கப்பட்டது என கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஊடகப் பொறுப்பாளர் ச.மைக்கல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago