2025 ஜூன் 25, புதன்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிறுவர் விடுதி திறப்பு

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் நவீன மயப்படுத்தப்பட்ட சிறுவர் விடுதி; மற்றும் புனரமைப்பு செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் முயற்சியின் பயனாக திகமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவியினூடாக இப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.டீ. இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் இப்லால் சுபைர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸத்தீன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சகீல இஸ்ஸத்தீன், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹீர்  உட்பட வைத்திய அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • maruthooraan Monday, 23 January 2012 05:20 AM

    முடிந்தால் வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய்து காட்டவும்.

    Reply : 0       0

    pasha Monday, 23 January 2012 08:21 PM

    ரியாத்தின் விடா முயற்சிக்கு கிடைத்த பலன்?.

    Reply : 0       0

    nalanvirumpu Thursday, 26 January 2012 11:19 PM

    இது அபிவிருத்தி சபையின் முயச்சி. தனிபட்ட நபரின் பெயரை சொல்லி அபிவிருத்தி சபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் சகோதரர்களே.

    Reply : 0       0

    avathaani Friday, 27 January 2012 03:20 AM

    கட்டிடங்கள் மட்டும் அலங்காரமாக அமையாமல், வைத்தியர்கள் வேண்டிக்கொண்ட மருந்துகளையும், உபகரணங்களையும் பெற்றுகொடாமல், வைத்தியர்களிடமிருந்து உச்ச பலனை எதிர்பார்ப்பது உசிதமல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .