2025 ஜூன் 25, புதன்கிழமை

கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுர மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 25 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 900 குடும்பங்கள் அவர்களது சொந்த இடங்களில் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்திற்கு முன்னராக மீள்குடியேற்றப்படுவார்கள் என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா தெரிவித்தார்.

கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர். இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கவேலாயுதபுரத்தில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் அருளானந்தம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இந்த இரு கிராம மக்களும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இரண்டு மேலாகிவிட்டபோதிலும் இதுரையில்  மீள்குடியமர்த்தப்படவில்லை. தங்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.  இந்த மக்களின் வேண்டுகோளை அடுத்து நான் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடி இதற்கான இணக்கம் பெறப்பட்டது. இந்த நிலையிலேயே இப்பகுதிகளுக்கான மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  

மக்களை மீள்குடியேற்றுவதில் உள்ள அடிப்படை பிரச்சினைகளான தற்காலிகக் கொட்டகைகள்,  வீதி வசதிகள்,  குடிநீர் வசதி, மின்சார வசதி, பாடசாலை வசதி ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், மக்களின் வாழ்வாதாரமான விவசாய வசதி,  குளங்களை புனரமைக்கும் நடவடிக்கை ஆகியனவும் மேற்கொள்ளப்படும்'  என்றார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் செயலாளர் பத்மநாதன், கிழக்கு மாகாண கால்நடை  திணைக்கள பணிப்பாளர் பி.கே.தேராஜன், கிழக்கு மாகாண மீன்பிடி
பணிப்பாளர் சுதாகரன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திலகவதி கணேசமூர்த்தி, திருக்கோவில் பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் நவிதரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Iya Friday, 27 January 2012 12:38 AM

    எத்தனை வருடங்களாக இம்மக்கள் கஷ்டப்படும்போது நீங்கள் எங்கே போனீர்கள் ? தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு .யோகேஸ்வரன் ஐயா , அங்கு சென்று நிலைமையை பகிரங்க படுத்திய பிறகுதான் ,அம்பாறை மாவட்டத்தில் இருந்த உங்களுக்கு தெரியவந்தது . எல்லாம் அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் மாகனசபைத் தேர்தலுக்காகத்தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .