2025 ஜூன் 25, புதன்கிழமை

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Super User   / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இறக்காமம் இடம்பெற்றது. இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது 2011ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக திணைக்களங்கள் வாரியாக ஆராயப்பட்டதுடன் 2012ஆம் ஆண்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, இறக்காமம் பிரதேச சபையின் பாவனைக்காக புதிய டபிள் கப் பிக்கப் வாகனமொன்றை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தினை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.நைசரிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண பதில் முதலமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், ஏ.எம்.ஜெமீல், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .