2025 ஜூன் 25, புதன்கிழமை

தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 27 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

 

தொழில் பயிற்சிகளை பூர்த்திசெய்த 100 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சுவாட் அமைப்பு அக்கரைப்பற்று தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பு ஒ.டி.டபிள்யூ நிறுவனத்தின் அனுசரனையில், அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் எஸ்.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒ.டி.டபிள்யூ நிறுவனத்தின் திட்ட நிறைவேற்று பணிப்பாளர் கே.ஏ.ஜே.காந்தா, சிரேஷ்ட நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் வி.நாகேந்திரன், சுவாட் அமைப்பின் நிகழ்சிதிட்ட பணிப்பாளர் கே.பிரேமலதன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் எஸ்.ரவிச்சந்திரன், தொழில் பயிற்சிவிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மின்சார இணைப்பு, தச்சுதொழில், குளிர்சாதனங்கள், அழகுக்கலை, போன்ற பயிற்சிகளை பெற்ற 100 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களும் தலா 15 ஆயிரம் ரூபா பெறுமதியான  உபகரணங்களும்  வழங்கப்பட்டன.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .