2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

Kogilavani   / 2012 ஜனவரி 28 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் குறிப்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கல்முனைப் பிரதேசத்திலுள்ள 29 கிராமப் பிரிவுகளுக்கும், ஒரு பிரிவுக்கு  தலா 10 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பரிந்துறைகள் ஆராயப்பட்டு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், சுகாதார அபிவிருத்தி முன்னெடுப்புக்கள், பிரதேச கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள், மீன்பிடி விவசாய அபிவிருத்தி ரீதியான விடயங்கள் போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கான முன்மொழிவுகளும் இடம்பெற்றன.

பாதிக்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 10 இலட்சம் நிதியும் இக்கூட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலும், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பதில் முதலமைச்சரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.றஸாக், எம்.எல்.துல்கர் நயீம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் உட்பட திணைக்கள தலைவர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Saturday, 28 January 2012 05:46 PM

    இவ்வாண்டிலாவது அணைத்து தரப்பினரையும் இணைத்து கல்முனை தொகுதி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவேண்டும்,பதில் முதலமைச்சரின் பங்குபற்றல் மகிழ்ச்சி அளிப்பதுடன் அரசியல் குதிரையோட்டம் அபிவிருத்திக்கு பாதகமாக அமையாமல் இருக்க பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    Reply : 0       0

    kalmunai zahira Saturday, 28 January 2012 06:22 PM

    நடக்கடும் நல்லா நடக்கடும்

    Reply : 0       0

    riswan Saturday, 28 January 2012 06:26 PM

    இவர்கள் எல்லாம் சேர்ந்து கல்முனையை அபிவிருத்தி செய்யவா? எத்தனையோ வீதிகள் வெறும் மணல் தரைகளை போன்று கிடக்கின்றன. இந்த நிதியில் இவற்றை எல்லாம் செய்து முடித்துவிடலமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .