2025 ஜூன் 25, புதன்கிழமை

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஜனவரி 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் பொதுமக்கள் நடமாடும் சேவையொன்றினை நேற்று சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் பீ.டபிள்யு.டி.டி.ஆரியரெட்ண தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல தேரர் மற்றும் பாடசாலை அதிபர் எஸ்.எம்.நபார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு, திருமண பதிவு உள்ளிட்ட பல விடயங்களில் இலவசமாக செய்துகொடுக்கப்பட்டதுடன், சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கல்வித்துறையில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் சாய்ந்தமருது பிரதேச வீட்டுத் தோட்ட முயற்சியாளர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .