Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 29 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரிய நீலாவணை, அரசடி ஸ்ரீ முருகன் ஆலயதிற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலய ஆதின கர்த்தா பிரம்ம ஸ்ரீ சதாசிவ ஐயர் ரவிந்தர ராஜ் சர்மா தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா மற்றும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் மு.லாவநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
இதன்போது, ஆலய ராஜகோபுர அடிக்கல்லை மாகாண அமைச்சர் நவரெட்ணராஜா நட்டு வைத்தார். ஆலய கோபுர கட்டிட நிதிக்கு தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 50,000 ரூபாவிற்கான காசோலையினை ஆலய ஆதின கர்த்தாவிடம் மாகாண அமைச்சர் ஒப்படைத்தார்.
அத்துடன் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கமநெகும செயற்திட்டத்தின் ஊடாக ஆலய கோபுர நிர்மானிப்புக்கு 5 லட்சம் ரூபா நிதியினை வழங்குவதாக மாகாண அமைச்சர் நவரெட்ணராஜா இதன்போது உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago