2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஹிங்குரான சீனித்தொழிற்சாலை பணிகள் மீண்டும் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.றஹ்மத்துல்லா)
 
கிழக்கு ஆசியாவின் மிகப்பெரியளவிலான அம்பாறை, ஹிங்குரான சீனித்தொழிற்சாலை இருபது வருடங்களின் பின்னர் 1,300 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அதிகளவிலான பங்களிப்புடன் பிறவுன் கம்பனி மற்றும் எல்.ஓ.எல்.சி நிறுவனங்களின் பங்களிப்புடன் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மற்றும் கரும்புச் செய்கையாளர்களுக்கு கரும்புச் செய்கை, புனரமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலை காண்பித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிங்குரனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லோயா திட்டத்தின் பணிப்பாளர் கே.பி.ரத்நாயக்க, திட்ட முகாமையாளர் டீ.அபேசேகர மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Monday, 30 January 2012 06:58 PM

    இனி அம்பாறை மக்களுக்கு சீனி அரை விலையில்?

    Reply : 0       0

    meenavan Monday, 30 January 2012 07:34 PM

    கரும்பினாலான சீனி உற்பத்தி செலவு அதிகமானது, 1300 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட ஆலையில் இருந்து உச்ச பலன் கிடைப்பது சந்தேகமே? சீனி உற்பத்தியைவிட கொந்தராத்து மூலம் கமிசன் முன்னுரிமை பெற,கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் நட்டத்தை ஏற்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் இத் தொழிற்சாலைக்கு வழங்கிய கடனுக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது.

    Reply : 0       0

    செம்பகம் Monday, 30 January 2012 07:51 PM

    கடல் வத்தி சீனியாக மாறினாலும் ....

    Reply : 0       0

    Musthafa Monday, 30 January 2012 10:08 PM

    நல்ல ஒரு திருப்பம் , நிறைய மக்கள் பயனடைய நல்ல ஒரு சந்தர்ப்பம் , நான் இங்கு பொறியலாளராக வேலை பார்த்துள்ளேன் , மிகவும் நல்ல ஒரு தொழிற்சாலை , நிறைய வளங்கள் நிறைந்த ஒரு பிரேதேசம்- வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    ummpa Monday, 30 January 2012 11:30 PM

    மீனவன், அவர்கள் கொஞ்சம் முயற்சி பண்ணி பார்க்க வேண்டாமா ?

    Reply : 0       0

    meenavan Wednesday, 01 February 2012 02:42 AM

    ummpa முயற்சி பண்ணலாம். ஆனால் இது ஆரம்பம் இல்லையே? ஏற்கனவே அரச,தனியார் என்று கைமாறி இலாபம் கிடையாமல், தொழில்சாலை உபகரணங்களை விற்று தனது நட்டத்தை ஈடு செய்தவரும் உண்டு. இந்நிலையில் 1300 மில்லியன் முதலீடு மிக அதிகமே.கரும்பு உற்பத்தியாளர்கள் நன்மை அடைந்தாலும் சீனி உற்பத்தி செலவு அதிகமே இதை பொறியியலாளரும் ஏற்றுகொள்வார் என எண்ணுகிறேன்.

    Reply : 0       0

    ummpa Wednesday, 01 February 2012 02:30 PM

    மீனவன், அது நமக்கு விளங்குகிறது. செலவு செய்வது அவர்கள் பணம் என்றால் தெரியும் எத்தனை "௦0" இருக்கிறது என்பது. என்ன செய்வது இலங்கை இல் பிறந்த குற்றத்துக்காக வாய் பொத்திக்கொண்டுதான் இருக்கவேண்டும் . நாம் இங்கு கருத்து தெரிவிக்கின்றோம் நாளை நம்மையும் தேடி வெள்ளை வான் வராமல் இருந்தால் போதும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .