2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்மாந்துறை தாதியர் உத்தியோகஸ்தர்கள் கவனயீர்புப் போராட்டம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 31 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தாதியர் உத்தியோகஸ்தர்களின் நாடுதழுவிய கவனயீர்புப் போராட்டத்தின்; கீழ் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலை தாதியர் உத்தியோகஸ்தர்களின் கவனயீர்புப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு வைத்தியசலை முன்றலில் இடம்பெற்றது.

தாதிய உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 14 அம்சக் கோரிக்கைகளை கொண்ட பதாதைகளுடன் தாதிய உத்தியோகஸ்தர்கள் காணப்பட்டனர்.

சீருடைக்  கொடுப்பனவை அதிகரி, விண்ஷட பிரிவுகளுக்கான கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வுகளை முன்பிருந்தவாறு அமுல்படுத்து, 2011ஆம் ஆண்டின் இடமாற்றத்தை அமுல்படுத்து, பராமெடிக்கல் சேவையிலுள்ளவர்களைப் போன்று தாதிய பதவியுயர்வுகளை அமுல்படுத்து, தரம் 1க்கான பதவி உயர்வு நிலுவையை 1988இலிருந்து வழங்கு, வைத்தியர்களுக்கு வழங்கும் தொலைபேசிக் கொடுப்பனவை எமக்கும் வழங்கு, மேலதிக நேரக் கொடுப்பனவை 180க்கு 1ஆக மாற்று, விட கொடுப்பனவுக்கான தடையை நீக்க  தாதிய உயர் பதவிகளுக்கான சலுகை வாகன அனுமதியை வழங்கு, பதவி உயர்வின் போது விண்ஷட தகுதியை கவனத்திற்கொள், 2009இன் 19ஆவது சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடையை நீக்கு என்ற வாசகங்கள் பதாதைகளில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 31 January 2012 08:18 PM

    உங்கள் கவன ஈர்ப்பு போராட்டம் கொடுப்பனவுகளை மட்டுமே நோக்கமாக கொண்டிராமல், நோயாளர்களை பராமரிப்பதிலும் கூடிய கவனஈர்ப்பு செலுத்த வேண்டும்.

    Reply : 0       0

    mi.samsudeen Wednesday, 01 February 2012 02:27 AM

    மன சாட்சிப்படி நீங்கள் செய்கின்ற வேலை போதுமானதா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .