2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தர்மசங்கரி மைதானத்தில் பார்வையாளர்கூடம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட   அக்கரைப்பற்று   தர்மசங்கரி மைதானத்தில் பார்வையாளர் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி நன்னீர் மீன்பிடித்துறை அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரெட்ணராஜா, இதற்கான அடிக்கல்லை  நாட்டிவைத்தார்.

இப்பார்வையாளர்கூடத்தை அமைப்பதற்காக ஐம்பது இலட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஒதுக்கியுள்ளார். இம்மைதான ஆரம்ப புனரமைப்பு வேலைகளுக்காக மாகாண அமைச்சர்   துரையப்பா நவரெட்ணராஜா  34 இலட்சம் ஒதுக்கி மைதானத்தை புனரமைத்திருந்தார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பியசேன, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ரில்விஸ் டி சில்வா, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்,  திருக்கோவில்  பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .