Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பிரதேசத்தில் போலி சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரையும் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுத்ததாகத் தெரிவிக்கப்படும் ஒருவரையும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
சவளக்கடை பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்துப் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை சோதனையிட்டனர். இதன்போது குறித்த நபரின் புதிய சிம்காட் வடிவிலான சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரையும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுத்ததாகத் தெரிவிக்கப்படும் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இப்புதிய சிம்காட் வடிவிலான சாரதி அனுமதிப்பத்திரத்தை 22,000 ரூபா செலுத்தி பெற்றுக்கொண்டதாகவும் இதனை பெற்றுத்தந்தவர் கொழும்பில் உள்ள ஒருவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அந்த நபரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago