2025 ஜூன் 26, வியாழக்கிழமை

த.தே.கூ.வின் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினராக வைரமுத்து தியாகராசா நியமனம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான வைரமுத்து தியாகராசா, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் புதிய உறுப்பினராக நேற்று புதன்கிழமை மாலை அக்கரைப்பற்றிலுள்ள கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினரான வடிவேலு துஷ்யந்தன், கடந்த வருடம் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து இவ்வெற்றிடத்திற்கு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த வைரமுத்து தியாகராசா நியமிக்கப்பட்டார். இதற்கான சத்தியப்பிரமாணம் அக்கரைப்பற்றில் பொத்துவில் தொகுதி அமைப்பாளரின் இல்லத்தில் நடைபெற்றது.

வைரமுத்து தியாகராசா கடந்த வருடம் நடைபெற்ற பிரதேசசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்ததுடன் இப்பிரதேசத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு தொடக்கம் மக்களுக்காக பல சேவையை ஆற்றிவந்ததற்காக ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தினால் 2007ஆம் ஆண்டு பொதுப்பணி துறையில் கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • fowz Friday, 03 February 2012 12:25 AM

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள் !

    Reply : 0       0

    IYA Friday, 03 February 2012 12:26 AM

    புதிய பிரதேச சபை உறுப்பினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்து அவர்களின் மனங்களில் இடம்பிடிப்பதோடு, கட்சியை மக்கள் மயப்படுத்த வேண்டும். எப்பொழும் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .