Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
யுத்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்காக தங்க வேலாயுதபுரம், சாகாமம், கங்சிக்குடியாறு, காஞ்சரம்குடா ஆகிய பிரதேசங்களில் பிரக்ரிக்கர் எக்சன் நிறுவனம், இந்திய அரசு மற்றும் குஜராத் மாநில சேவா அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கவுள்ளதாக பிரக்ரிக்கர் அக்சன் நிறுவனத்தின் முகாமையாளர் விசாக்கா கிடலகே தெரிவித்தார்.
தங்கவேலாயுதபுர பிரதேசத்திற்கு பிரக்ரிக்கர் எக்சன் நிறுவனத்தின் முகாமையாளர் விசாக்கா கிடலகே தலைமையில் குஜராத் மாநில சேவா அமைப்பின் தலைவி உமாதேவி மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடனான குழு ஒன்று நேற்று புதன்கிழமை
விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களுடன் சந்தித்து உரையாடியது.
கடந்த 2007ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தங்க வேலாயுதபுரம், சாகாமம், கங்சிக்குடியாறு, காஞ்சரம்குடா ஆகிய கிராமங்களில் சாகாமம், காஞ்சரம்குடா ஆகிய பிரதேச மக்கள் மீள்குடியேற்றப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி வாழந்து வருவதுடன் கங்சிக்குடியாறு, வேலாயுதபுரம் ஆகிய கிராமங்கள் மீள்குடியேற்றப்படாமல் மக்கள் பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் உறவினர் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் நிலையான வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக இவ்வீடுகளை கட்டிகொடுப்பதாகவும் இதற்கான அங்கீகாரம் பெறுவதற்கான தகவல்களை பெற்றுச்சென்று இவ்வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
7 hours ago