2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கைதிகள் கூடத்தில் உயிரிழந்தவரின் ஜனாஸா நல்லடக்கம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கைதிகள் கூடத்தில் மரணமான உதுமாலெப்பை மௌஜுனின் ஜனாஸா நேற்று இரவு 11.30 மணியளவில் பெருமளவான பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவைச் சேர்ந்த மேற்படி உதுமாலெப்பை மௌஜுன்  6 பிள்ளைகளின் (05 ஆண்கள், ஒரு பெண்) தந்தையாவார்.

மேற்படி நபர் கஞ்சா வைத்;திருந்தார் எனும் குற்றச்சாட்டில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் பொருட்டு, நீதிமன்றத்தின் கைதிகள் சிறைக் கூடத்தில் தடுத்து வைத்திருந்த போது, மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மரணமானவரின் ஜனாஸா மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதன் பின்னர் அவரின் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, மேற்படி நபர் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானதாலேயே மரணமானதாகத் தெரிவித்து  நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

  


You May Also Like

  Comments - 0

  • meenavan Saturday, 04 February 2012 10:57 PM

    பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கை மரணத்தின் காரணத்தை தெளிவாக்கவில்லையா? உறவினர்களும்,சுற்றத்தாரும், தலைவனை இழந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தில் துணை செய்யவேண்டும்.

    Reply : 0       0

    jalee Sunday, 05 February 2012 07:53 AM

    குடும்பத் தலைவனை இழந்து பிள்ளைகள் தன் தகப்பனை இழந்து .இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே, வலுவிழக்கச் செய்து அந்த குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிட்ட பாவிக்கு என்ன தண்டனை? இக்குடும்பத்துக்கு நீதி நியாயம் கிடைக்குமா? இவர் 7 பிள்ளைகளின் தந்தையாவார். அதிக முஸ்லீம்களின் வாக்குகளைப் பெற்ற நீதியாமைச்சரும் எமது பிரதேச சபை தலைவரும் மரணமானவரின் குடும்பத்துக்கு நீதியும் நியாயத்ததோடு நஸ்டஈடும் பெற்றுக் கொடுக்க வழி சொய்வார்களா ?

    Reply : 0       0

    kundaanthady Sunday, 05 February 2012 10:36 PM

    முதலில் இந்த சம்பவம் பற்றி இவ்வூர் மக்கள் பிரதி நிதிகள் ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்... அமைச்சர் அதாவுல்லா , நர் ஹகீம் போன்றோர் முதலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி முதுகெலும்பில்லாத அரசியல் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் ... மக்களுக்காகவே பிரதிநிதிகள் என்பதை மனதில் வைக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .