2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை பிரதேச  செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு   நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உதவி பிரதேச செயலாளராக இருந்து கல்முனை மாநகர ஆணையாளராக சென்ற ஜே.லியாகத்அலி, சம்மாந்துறை பிரதேச செயலக நிதி உதவியாளராக கடமையாற்றி தொழில் நுட்பக் கல்லூரியின் பதிவாளராக சென்ற எம்.ரீ.எம். சரீம், ஓய்வு பெற்ற கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் உட்பட 29பேர் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • UMMPA Sunday, 05 February 2012 08:06 PM

    தொழில் நுட்பக் கல்லூரியின் பதிவாளராக சென்ற எம்.ரீ.எம். சரீம் அவர்களுக்கு பாராட்டுகள்.

    Reply : 0       0

    M I M Kaleel Tuesday, 07 February 2012 04:39 PM

    பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .