2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்படும்: அதாவுல்லா

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                              (எம்.சி.அன்சார்)

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் சகலவின மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட வழிவகுக்குமென  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களென இனங்களைப் பிரிப்பதும் எமது நாட்டினைப் பொறுத்தவரையில் பொருத்தமானதல்லவெனவும் அவர் கூறினார்.

இலங்கையின் 64ஆவது சுதந்திரதின வைபவம்  அம்பாறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை அம்மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'மாகாணங்களில் வாழும் சகலவின மக்களுக்கும் தேவையான பிரயோசனப்படுத்தக்கூடிய அதிகாரங்களே வழங்கப்பட வேண்டுமே தவிர சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கென்று அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அது நாட்டினை கூறுபோடுவதாக அமையும்.
நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ்ந்துவரும் இந்நிலையில் பொறாமை கொண்ட வெளிநாட்டுச் சக்திகள் இந்நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி நாட்டின் வளங்களை  சூறையாடுவதற்கு முயற்சிக்கின்றன. அதேபோல் உள்நாட்டில் அதிகாரத்தினை பெற எத்தனிக்கும் சக்திகளோடு சேர்ந்து நாட்டின் தலைமைத்துவத்தினையும் அரசாங்கத்தினையும் கவிழ்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமை நாட்டில் மீண்டும் குழப்பத்தினை ஏற்படுத்தி குளிர்காய முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • junaide Tuesday, 07 February 2012 12:56 AM

    சிராஜ் உமக்கு தெரியாது கேளு. முஸ்லிம் அரசியல்வாதிகளில் தைரியமானவன் அதா தான் .முற்றத்து மல்லிஹை உமக்கு மனக்காது.

    Reply : 0       0

    hhoties Monday, 06 February 2012 04:00 PM

    He will tell like his standard. We dont need to worry about him.

    Reply : 0       0

    senayuran Monday, 06 February 2012 04:56 PM

    ராசிக்,
    ஹெல உறுமயக்கு முன் தலைவர் அஸ்ரப்பின் காலம் தொட்டு வடக்கில் இருந்து கிழக்குப் பிரிய வேண்டும் என்று தனிக் குரலாய் நின்று ஒலித்தவர் அத்தாஉல்லா.
    நீங்க இன்னும் நித்திரையா? ராசிக், ஹல உறுமய காலத்தில் வந்தவரா நீங்க ?? இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது படித்து தெரிங்க.

    Reply : 0       0

    senayuran Monday, 06 February 2012 07:01 PM

    dj
    அதாஉல்லாவை slmc உருவாக்கியது ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் தற்போதைய slmc அல்ல அது. தலைவர் அஸ்ரபோடு அவரை உருவாக்கிய கட்சி அழிந்துவிட்டது. இப்போ கட்சியில் இருப்பவர்கள் அதா உல்லா உருவாக்கியவர்கள் உ +ம்(தலைவர் அஸ்ரப் பின் கட்சியின் தற்போதைய தலைவருக்கு தலைமை கொடுக்கப்பட்டது ) அன்றும் தனி மனிதனாக நின்று பெண் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வெற்றியும் கண்டார். இன்றும் வெற்றி காண்பார்.....

    Reply : 0       0

    Nanpan... Monday, 06 February 2012 07:09 PM

    இந்த அரசாங்கம் இவர்களை ஒரு கைப்பாவையாக மட்டுமே பயன்படுத்துகிறது. இவர்களால் முஸ்லிம் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் கிடைக்கவுமில்லை, கிடைக்கப்போவதுமில்லை. இவர்களெல்லாம் வெறும் பொம்மைகள்தான். இவர்கள் அரசாங்கம் சொல்லிக்கொடுப்பதை பேசுபவர்கள், மாறாக இவர்கள் ஒரு ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Zeeroooooooooo.

    Reply : 0       0

    meenavan Monday, 06 February 2012 07:18 PM

    thala அவர் சொன்னால் எதுவும் நடவாமல் விட்டிருக்குதா என்பதன் மூலம் அவரை அவ்லியாவாக்கி (துதிசெய்து ) வழிபடாதீர்கள் ? சமத்துவம், சுதந்திரம் அதை நானும் ஆதரிக்கிறன், ஆனால் நமது தலைவர்கள் என்று சொல்பவர்களின் பதவிக்கான கழுத்தருப்புகளும், காட்டிகொடுப்புகளும் தானே அம்பாறை மாவட்டத்தின் சுனாமி நுரைசோலை வீடுகளும்,அஸ்ரப் நகர விவகாரமும் இழுபறிகளுக்கு முடிவில்லாமல் இருப்பதற்கு காரணம் என்பது கசப்பான உண்மைதானே?

    Reply : 0       0

    naanthaan Monday, 06 February 2012 07:25 PM

    அதா எதனையும் சும்மா பேசமாட்டார். அர்த்தம் புரியும் பொறுமையா இருங்கள். யாரும் சும்மா கத்த வேண்டாம்.

    Reply : 0       0

    junaid Monday, 06 February 2012 07:37 PM

    போலீஸ் ,காணி என்று முதலாவது பேசவே இல்லை. பொதுவா அதிகாரங்கள் பற்றி தான் பேசினார். அதிகாரம் இனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பேசினார். இதில் என்ன தவறு ?இனங்களை பிரிக்காமல் நிம்மதியாக வாழ விடுங்கள் என்றார் தவறா ?

    Reply : 0       0

    Mohamed Monday, 06 February 2012 08:01 PM

    அன்பு Senayuran ! சார் கொக்கரிக்க மட்டும்தான் (கதிரைக்காக). வடக்கு கிழக்கு பிரிவதற்கு வழக்குத் தாக்கல் செய்ய போனவர் சம்மாந்துறை ஊரைச் சேர்ந்தவர். அது தெரியுமா உங்களுக்கு!

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 06 February 2012 08:09 PM

    ஹி ஹி ஹி வடக்கு கிழக்கு பிரிப்பில் இவருக்கு என்ன சம்மந்தம் இருக்குங்கோ. சும்மா மேடையில் கூக்குரலிட்டதால் பியோசனம் இல்லை. அது பிரிவிற்கு இந்தியாதான் காரணம். சொல்லி வைங்கோ.

    Reply : 0       0

    meenavan Monday, 06 February 2012 08:41 PM

    akp வாப்பா உங்கள் மன நிலையில் மாற்றத்தை ஏட்படுத்துங்கள், உங்கள் அவர் நாட்டின் தலைவரானாலும் கவலை இல்லை, நுரைச்சோலை வீடுகள், அஸ்ரப் நகர மக்களது மக்களது பிரச்சினைகளுக்கேனும் முடிவை பெற்று கொடுங்கள்.

    Reply : 0       0

    சேணையுரான் Tuesday, 07 February 2012 12:05 AM

    தம்பிகளா சொல்லுரன் கேலுங்க
    இந்த குரல் ஓங்கி ஒலித்ததினால்தான் கிழக்கின் மகன் ஒருவன் வழக்கு தாக்கல் செய்தான், வெற்றியும் கண்டாண். வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார்கள். ஒரு துளி இரத்தம் சிந்தாமல் பிரியும் என்றார். அப்படியே பிரிந்தது. இதுதான் தலைவனின் துார நோக்கு.
    நுரைச்சோலை வீடுகளை எதிர்கால திட்டமிடாமல் அமைக்கப்பட்டதநால்தான் இவ்வலவு பிரச்சணைகள் அமைச்சர் அதாவுக்கும் நுரைச்சோலை வீடுகளுக்கும் என்ன சம்மந்தம்? வீடுகளை அமைத்தவர்களுக்கு பிரதேச மக்களை பற்றிய முன் அனுபவம் குறைவு.

    Reply : 0       0

    சேணையுரான் Tuesday, 07 February 2012 12:30 AM

    எந்த அரசிக்கும் சோரம் போகாதவரே அமைச்சர் அதா .
    இதே அரசில் இருந்து கொண்டு அரசினால் சிறுபாண்மை மக்களுக்கு பாதகமாக கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சி திருத்த சட்டத்தினை கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு எதிராக தோக்கடித்து வரலாறு படைத்ததும் இந்த அதாஉல்லாவின் தலைமையில் இயங்கும் தேசிய காங்ரசின் மாகாணசபை உறுப்பிணர்களே. இப்படியானவர் கதிரைக்கு ஒருபோதும் ஆசை பட மாட்டார் மாறாக பிழைகளை தட்டிக்கேட்பார் .

    Reply : 0       0

    செம்பகம் Monday, 06 February 2012 03:01 PM

    உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா, எங்களை நாங்களே ஆழவேண்டும் எங்களுக்கு எல்லையிருந்தால்தான் நாங்கள் உறவாடலாம் அன்னன் என்றும் ஐயா என்றும் நானா என்றும் 2000ம் ஆண்டில் ஒலுவில் அல்கம்ரா பாடசாலையில் பேசியது ஞாபகமில்லையோ அமைச்சரே?

    Reply : 0       0

    akp Tuesday, 07 February 2012 03:27 AM

    meenavare....

    தம்பி மீனவா.....நீங்க ஒரு விதண்டாவாதியே தவிர .. உங்களுக்கு அரசியல் அறிவு அனுவளும் இல்லை , பிரதேசவாதத்தை தவிர ...(மன்னிக்கும் என்னை),
    ஒன்குடா இந்த நுரைச்சோலை பிரச்சினையை என் SLMC மஹா மந்திரிகள் தீர்த்து வைக்கவில்லை .......

    Reply : 0       0

    junaideen Tuesday, 07 February 2012 03:59 AM

    பட்டம் பதவிக்கு அதா ஒருபோதும் ஆசைப்பட்டவர் இல்லை. உதாரணம் பிரதி கல்வி அமைச்சை கூட ராஜினாமா பண்ணி காட்டியவர் அதா. மறந்து விட்டதா தம்பிமார்களே. உங்களுக்கு
    பட்டம் பதவி அவருக்கு தூசி தம்பிமாரே

    Reply : 0       0

    meenavan Tuesday, 07 February 2012 06:03 AM

    சகோ. akp நுரைச்சோலை என்பது அமைச்சரது (அ.பற்று) ஆளுகைக்கு உட்பட்டது என்பதில் நம் இருவருக்கும் மாற்று கருத்து இல்லையென எண்ணுகிறேன், இந்நிலையில் அதைப்பற்றி கூறினால் பிரதேசவாதமா? ஏன் SLMC மஹா மந்திரிகள் தீர்க்கவில்லை...அஸ்ரப் நகர விடயம் மறைத்து விட்டீர்கள் இவ்விடயத்தில் நவ. 12.2011 மிரர் எனது கருத்தை பார்க்கவும், நுரைச்சோலை சிக்கலுக்கு காரணம் யார் என்பதை அமைச்சரது மனம்(இருந்தால்) சாட்சி கூறும், SLMC மஹா மந்திரிகளையும் இணைத்து நுரைச்சோலை விடயத்தில் தீர்வு காணும்படி அதா அமைச்சரிடம் கூறுங்கள்.

    Reply : 0       0

    kasa Tuesday, 07 February 2012 04:18 PM

    தீகவாபி, அஸ்ரப்நகர், பிரச்சனையை செய்திகளில் படித்தவர்கள்தான் இதில் கருத்து சொல்கின்றனர். ஆனால் ஒன்றை நான் சொல்கின்றேன், இங்கு களத்தில் உண்மையாக பாதிக்கபட்டவர்கள் யார் என பக்கசார்பு இன்றி ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். நானும் ஒரு வெளிநாட்டு சகோதரி ஒருவரும் 3 மாதங்கள் அணைத்து மட்டங்களிலும் சேகரித்த தகவல்களும், கருத்துக்களும் எனக்கு கூட ஆச்சர்யத்தை அளித்தது.

    Reply : 0       0

    meenavan Tuesday, 07 February 2012 07:30 PM

    kassa உங்கள் பக்கசார்பு இன்றி வெளிநாட்டு சகோதரியுடன் இணைந்து சேகரித்த தகவல்களை தமிழ் மிரர் ஊடாக வெளியிட முடியாதா? நாங்கள் அறிந்த தகவல்களை வைத்து கூறும் கருத்துகள் சிலவேளை மற்றவர்களின் உரிமை, சுதந்திரத்தில் ஊறு விளைவிப்பதாக அமையக்கூடாது என்ற ஆதங்கம் உண்டு.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 08 February 2012 12:43 AM

    அஷ்ரப் நகர் மக்களின் காணிப்பிரச்சனை இதுவரையில் ஏதாவது பேசியிருக்காரா? அது போகட்டும் நுரைச்சோலையில் பேரியலின் முயற்சியால் கட்டப்பட்ட 500 வீடுகள் எங்கே என்ன பேசினார் மக்களை கூட்டி விட்டார், ஆனால் நல்லது இன்னும் நடக்கல.

    Reply : 0       0

    lavanas Wednesday, 08 February 2012 01:05 AM

    எனக்கு சிரிப்பா இருக்கு. எதுக்குங்க இந்த வாக்குவாதம்? கிழக்கில் உரிமைக்குரல் எடுக்கும் SLMC என்ன செய்தது ? அதாஉல்லாஹ் என்ன செய்திருக்கிறார் என்பது வெளிப்படைதானே? இலக்சன் நாட்களில் மாத்திரம்தானா உரிமைக்குரல்?

    Reply : 0       0

    akp Wednesday, 08 February 2012 03:58 AM

    @ meenavan....
    குருடனுக்கு யானைய பத்தி வெளங்க படுத்த இயலாது ..........,
    நல்ல காலம் நீங்க Plastine பிரச்சினைய ஏன் Athaullah தீர்த்து வைக்கவில்லை என்று கேட்காமல் விட்டது ........

    Reply : 0       0

    kasa Wednesday, 08 February 2012 04:36 AM

    சகோதரா மீனவன். இந்த அறிக்கை பல்கலைகழகம் ஒன்றின் மாணவியால் மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு விசேட கூட்டமொன்றில் முன்வைக்கபட்டது. (நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இல்லை) அனுமதி பெற்று edit பண்ணபட்ட information பறிமாறிகொள்ளலாம்.

    Reply : 0       0

    neethan Wednesday, 08 February 2012 02:04 PM

    @akp பிடிவாததிக்கு வாகடத்திலும் வைத்தியம் இல்லை,முழிச்சிகிட்டு படுப்பவரை எழுப்பவதும் சிரமம் தான் உங்கள் நிலை. palastine ஏன் செல்வான் அ. பற்று.சந்தி ரவுண்டு அபௌட்(round about) மணிக்கூடு கோபுரம் (clock tower)புனர் நிர்மாணம் நமது விழுமியம் பேண வெளிக்கிட்டு மூகுடைபட்டதை மறக்கவேண்டாம்.

    Reply : 0       0

    Akp Thursday, 09 February 2012 03:48 AM

    @ neethan....
    நண்பரே நான் நினைக்கிறேன் உங்களுக்கு புடிவததிர்க்கும் & யதார்த்ததிற்கும் வித்தியாசம் தெரியாது என்று ........
    Clock Tower ஐ புனர் நிர்மாணம் செய்வதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை ....என்னை பொறுத்தவரை அதற்க்கு புனர்நிர்மாணம் தேவையில்லை .............,
    அதற்கு செலவு செய்யும் பணத்தை யாரும் எளிய மக்களுக்கு கொடுக்கலாம் .

    Reply : 0       0

    asver Thursday, 09 February 2012 03:25 PM

    இவங்கல்லாம் மக்களின் பிரசினையை தீர்க்கவந்தவர்கள் அல்ல. உரிமையை வாயல மட்டும் தேர்தல் காலங்களில் பேசுவாங்க.

    Reply : 0       0

    pasha Monday, 06 February 2012 03:45 AM

    நக்குண்டான் நாவிலந்தான் இது, சகல அரச தரப்பு மந்திரிகளுக்கும் பொருந்தும். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த காணி போலிஸ் அதிகாரம் பற்றி வாய் திறக்கவில்லை. ஏனோ தெரியல்ல.

    Reply : 0       0

    Jeyeroopen Sunday, 05 February 2012 09:30 PM

    இப்பதான் சரியான தலைமைத்துவம்

    Reply : 0       0

    Reesath Sunday, 05 February 2012 09:42 PM

    அக்கரைப்பற்று மூலையில் இருந்து நாட்டுக்கான தீர்வு யோசனை. ஜெயவேவா ஜெயவேவா ,

    Reply : 0       0

    janoovar Sunday, 05 February 2012 10:00 PM

    நீங்கள் சொன்னால் சரியாய் இருக்கும் தலைவா!

    Reply : 0       0

    avathane Sunday, 05 February 2012 10:39 PM

    கதிரைக்காக இந்த நாடு பௌத்தர்களுடையதுதான் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

    Reply : 0       0

    Sathis Kumar Sunday, 05 February 2012 11:57 PM

    இன்றைய அரசுக்கு பதிலாக வேறு ஒரு இயக்கம் அரசாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுவீர்கள்..

    எங்களுக்கு தெரியாதா? இந்த நாடகத்தை .

    Reply : 0       0

    kundaanthady Sunday, 05 February 2012 11:57 PM

    காணி அதிகாரம் நம்மிடம் இல்லாமையால் தான் தீகவபியைசுற்றி இருந்த எமது மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் ..... இன்னும் காணிகள் சுவீகரிப்பதட்காக எத்தனையோ அடாவடிகள் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன ....உங்கள் கருத்து முஸ்லிம் சகோதரர்களையும் பாதிக்கும் தலைவரே. .தூர நோக்கோடு சிந்தியுங்கள் .

    Reply : 0       0

    thala Monday, 06 February 2012 12:37 AM

    அவதானி... எதுவென்றாலும் யதார்த்தை மாத்திரம் உணர்ந்துதானே பேசவேண்டும் அல்லது சொல்ல வேண்டும்......

    Reply : 0       0

    KS Monday, 06 February 2012 12:47 AM

    தற்போது பொது மக்களின் காணி பிணக்குகளை கையாள்வதற்கான காணி அதிகாரம் பிரதேச செயலாளருக்கு/ அரசாங்க அதிபருக்கு உள்ளது எனவே இனம், மொழி, பிரதேசம் பார்த்து காணி அதிகாரம் பிரிக்கபடவேண்டியதில்லை. நம்மவர்கள் போலீஸ் என்றால் துவக்கு, வெடி என ராணுவத்துக்கு சமமாக பார்க்கின்றார்கள். சிவில் நிர்வாகத்திற்கு பொருத்தமாக தற்போது உள்ள கட்டமைப்பை குறைகளை நிவர்த்தி செய்தால் போதும். தனி போலீஸ் அதிகாரம் தேவை இல்லை.
    கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்றீர்கள். நடந்தது....
    இப்போது.......... நடக்கட்டும் ........

    Reply : 0       0

    ibnuaboo Monday, 06 February 2012 12:50 AM

    வடக்கும் கிழக்கும் பிரிவதற்காக வாதாடிய தலைவர் . நாட்டுக்கு எதிரான மற்றொரு சூழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஞ்சா நெஞ்சன் அமைச்சர் அதாஉல்லா. இன்னும் சொல்லலாம் காலம் வரும். அக்கரைப்பற்றின் ஒரு மூலையில் இருந்துதான் இன்று பெரும் அமைச்சு ஒன்றை அதாஉல்லா ஆண்டு வருகின்றார்.

    Reply : 0       0

    meenavan Monday, 06 February 2012 12:58 AM

    குண்டான் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் சமுக தலைவர்களாக அமையும்போது, இது தான் நிலைமை. சிற்றசர்கள் தங்கள் பதவியை தக்கவைக்க எதையும் செய்வார்கள். வாப்பா தான் இவர்களுக்கு நல்ல வழிகாட்டலை வழங்க வேண்டும்.

    Reply : 0       0

    thala Monday, 06 February 2012 03:19 AM

    மீனவன்.... ! குண்டான் சட்டியில் குதிரை ஓட்டுபவராக இருந்தாலும் அவர் யதார்த்தத்தைப் பேசுபவரே! அவர் சொன்னால் எதுவும் நடக்காமல் விட்டிருக்குதா? தற்போது எமக்குத்தேவை எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய தீர்வே அவசியமாகும். அதைவிட்டுவிட்டு இனங்களை பிரித்தாலக்கூடியே எந்தத்தீர்வுமே எமது நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    Reply : 0       0

    Ulavan Monday, 06 February 2012 03:39 AM

    போலீஸ் & காணி அதிகாரங்கள் கட்டயமஹா மத்திய அரசின் கீழ்தான் இருக்க வேண்டும்.....
    யார் யார் எதை சென்னாலும் .. இவர்களால் Athaullah வின் நரை முடியை முடியைகூட அசைக்க முடியாது.......
    SLMC எங்கு உருவாக்கபட்டது ராஜா ??

    Reply : 0       0

    ummpa Sunday, 05 February 2012 09:23 PM

    உங்களுக்கு என்ன ? கொஞ்சம் பின்னோக்கிப்ப்பர்த்தல் புரியும் உங்கள் ஆரம்பம். அந்தவேளை தேவைப்பட்டது உரிமை இப்போது எதக்கு நீங்கள் ராஜா மாறி வலம்வரும்போது. கொஞ்சம் நிதர்சனமாக வாருங்கலத்தை பற்றி சிந்தித்து கதைங்கோ ஜயா? இல்லாவிட்டால் இந்த யோகம் எல்லாம் காடேரிவிடும். ஆகவே புரிந்து கொள்ளுங்கள் . கதிரைக்காக கருது தெரிவிக்காமல் அழுகின்ற மக்களுக்காக அணைந்துவிட்டவர்களுக்காக பேசுங்கள்.

    Reply : 0       0

    Razik-kilakkaan Monday, 06 February 2012 04:46 AM

    கிழக்கு பிரியவேண்டும் என்று குரல் குடுத்தவர் அதவுல்லா . அவர் வெளிப்படையாக பேசுபவர். பலரை பொறுத்தவரை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டலாம் . ஆனால் அக்கரைப்பற்றில் தான் முஸ்லிம் அரசியல் புரட்சிகள் புறப்பட்டிருக்கின்றன. கிழக்கின் பிரிவுப் புரட்சிக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அதாவுல்லா கட்சி சேர்க்கும் பணியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். மீண்டும் எச்சரிப்போருக்கு இனிமேல் பயங்கரவாதம் இலங்கையில் முளைவிட முஸ்லிம்கள் இடமளிக்கக் கூடாது என்பதில் அதாவுல்லா உறுதியாக இருக்கிறார். மகிந்தவுக்கு உறுதுணையாக நிற்கிறார்.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 06 February 2012 04:53 AM

    வக்காளத்து இவர்களின் தலையுடனேயே சேர்ந்து வந்திருக்கு எனவே மக்களின் ஆட்சியை மக்களுக்கே கொடுக்க வேண்டும். தலைவர் சிந்தித்தால் சரியா இருக்குமாம். அதுக்கு தலைவர் சிந்திக்க வேண்டுமே. தலை மட்டும்தான் இங்கு சிந்திக்குது அவர் யார் என்று சொல்லுங்கோ.

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 06 February 2012 04:56 AM

    ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அடுத்த முதலமைச்சரை பெறும் உண்மை புரிந்து விட்டது. அதுதான் இந்த அறிக்கை. சாரே சாரே சாம்பாறு சாரிண்ட வீட்டில் களியானம் என்னும் மலையாளப்பாடல் ஞாபகம் வருதுங்கோ சிரியுங்கோ.

    Reply : 0       0

    senaiyuraan Monday, 06 February 2012 05:13 AM

    உம்பா
    எதிர்காலத்தை யோசிக்காமலா வடக்கில் இருந்து கிழக்கு பிரிய வேண்டும் என்ரார்.
    சுதந்திர கிழக்கின் முதலமைச்சராக தமிழ் மகன் வரவேண்டும் எண்று தன்னந் தனியாக ஒலித்த குரல் என்றும் கதிரைக்கு ஆசை படமாட்டாது.

    Reply : 0       0

    senaiyuraan Monday, 06 February 2012 05:26 AM

    kundaanthady
    காணி அதிகாரம் இல்லாமலே அஸ்ரப் நகருக்குல் எல்லை அது ஒரு சாரார் மேற்கில் இருந்து . அதிகாரம் கிடைத்தால் மறுசாரார் வடக்கில் இருந்து ............ மொத்தத்தில் எல்லாம் நமக்குத்தான். அட்டாளைச்சேணைக்கு மட்டும் அல்ல அதிகாரம் முழு கிழக்கிலங்கைக்கும் எண்பதையும் சிந்தியுங்கள். அமைச்சர் அதாஉல்லா சொன்னால் அது துார நோக்குத்தான் விளங்கும் கொஞ்சம் சொணங்கும் wait & see

    Reply : 0       0

    Risvi Monday, 06 February 2012 05:47 AM

    @Razik-kilakkaan, வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என ஹெல உறுமயவும்தான் குரல்கொடுத்தது. அதனால் ஹெல உறுமய சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்கிறீர்களா?

    Reply : 0       0

    Razik-kilakkaan Monday, 06 February 2012 05:56 AM

    இன மத பேதமற்று கிழக்கில் யாரும் முதலமைச்சராக வரலாம். அதவுல்லா அல்ல இங்கு முக்கியம். அதவுல்லாவின் குரலுக்கு பின் அதாவுல்லாவை பிடிக்காவிட்டாலும் அவரின் கருத்த்துக்குப் பின் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் சிங்களவர்கள் ஏன் சில தேசிய தமிழர்களும் கூட கிழக்கு பிரிந்திருக்க ஒளிந்திருக்கும் கதை இருக்க, நக்குண்டார் நாவிழந்தார், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்றெல்லாம் வக்கற்ற வரலாற்றை கதையாக்கும் கனவு காண்போர் தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். முஸ்லிம் காங்கிரஸ் கூட போலீஸ் அதிகாரம் காணி அதிகாரம் கேட்டிருக்கிறார்கள். கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டும் போலிசும் காணியும் இலங்கை மத்திய அரசுக்குரியது. க

    Reply : 0       0

    Akp Monday, 06 February 2012 07:36 AM

    meenvar & Avathani......
    நண்பர்களே athaullavin இந்த வளர்சிக்கி காரணம் உங்களைப் போன்ற நற்குணம் படைத்த பிரதேசவாதம் பிடித்தவர்கள் தான் .................

    Reply : 0       0

    Mohamed Monday, 06 February 2012 07:40 AM

    சார், மாகாண சபை ஏன் உருவாகப்பட்டது... 13 வது திருத்தத் சட்டத்தில் என்ன விடயங்கள் கூறப்பட்டுள்ளது, அதிகார பரவலாக்கல் என்றால் என்ன..., கடந்த 50 வருட காலமாக நமது நாட்டில் என்ன நடந்தது போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு பொறுப்புடன் பேசுங்கள்..

    Reply : 0       0

    thivaan Monday, 06 February 2012 11:47 AM

    காகம் கரைந்து சூரியன் உதயம் ஆவதில்லை .

    Reply : 0       0

    DJ Monday, 06 February 2012 02:04 PM

    SLMC நிச்சயமாக அக்கரைப்பற்றில் உருவாக்கப்பலவில்லை Mr. Ulavan. SLMC யினால்தான் அதாஉல்லாஹ் உருவாக்கப்பட்டார். நன்றாக நினைவு கூர்ந்தது கொள்ளுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .