Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
A.P.Mathan / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச கலாசார விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது பல்வேறுபட்ட கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, விழாவினையொட்டி பாடசாலை மற்றும் திறந்த மட்டங்களில் நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும், பிரதேசத்திலிருந்து தேசிய மட்டங்களில் விருதுகளைப் பெற்றுக்கொண்ட ஆசுகவி கலாபூஷண் அன்புடீன், கலாபூசண் பாலமுனை பாறூக், கலாபூசண் ஜெலீல் (ஆசிரியர்) மற்றும் கலாபூஷண் பாலமுனை ஆதம் ஆகியோர் இவ்விழா மேடையில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌவிக்கப்பட்டனர்.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகப் புதிதாகப் பதிவியேற்றுக் கொண்ட ஐ.எம்.ஹனீபாவும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
இவ்விழாவின்போது 'சேனைமுனைவில்' எனும் செய்தி மடலும் வெளியிடப்பட்டது.
மேற்படி கலாசார விழாவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.கிதுறுமுஹம்மட், சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.அமீன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் அப்துல் ரஸ்ஸாக் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவினை கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.அம்ஜத் நெறிப்படுத்தியிருந்தார்.
asm rusthi Wednesday, 08 February 2012 06:59 AM
புதிய பிரதேச செயலாளரின் வருகைக்கு வாழ்த்துக்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
7 hours ago