2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பு வேலைத்திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான இணைப்பு வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை மஜீட்புர வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட விபுலாநந்தா மகாவித்தியாலயம், மஜீட்புர வித்தியாலயம் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அல் அமீன் மகாவித்தியாலயம், கணேஸ்வரா மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்காக நடாத்தப்பட்ட  இந்த 5நாள் வேலைத்திட்டமானது  இம்மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்;பட்டு நேற்று திங்கட்கிழமை வரை இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பாறை மாவட்ட அலுவலக பொறுப்பாளர் எம்.ஏ. சலீம் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் வளவாளர்களாக, பயிற்றுவிப்பாளர்களான எம்.ஜே.தாரிக், ஜே.வாத்சா ஆகியோர்கள்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .