2025 ஜூன் 26, வியாழக்கிழமை

எம்.ஜி.ஆர். ஞாபகார்த்த ரத்தினதீப கௌரவ விருது வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

மலையக கலை, கலாசாரக் கழகத்தின் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். ஞாபகார்த்த ரத்தினதீப கௌரவ விருது வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

எம்.ஜி.ஆர். மன்றத்தின் தலைவரும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளருமான எம்.எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக ஆலையடி வேம்பு பிரதேச சபையின் தவிசாளர்  ரத்னவேல், ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறை சார்ந்த 18 பேர் எம்.ஜி.ஆர். ஞாபகார்த்த ரத்தினதீப கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 08 February 2012 03:11 PM

    அருள்.சகோ. மத்தியூ பொருத்தமான தெரிவு வாழ்த்துகள்.

    Reply : 0       0

    Iya Thursday, 09 February 2012 12:16 AM

    எம் .ஜி . ஆரின் கொள்கையைப் பின்பற்றுவதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவான பிறகு அரசு பக்கம் தாவிய பியசெனவுக்கு மக்கள் அடுத்த தேர்தலில் பதிலடிகொடுக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .

    Reply : 0       0

    mi.samsudeen Thursday, 09 February 2012 02:59 AM

    பியசேன அரசியல் வாதியல்ல. அவர் மக்கள் தொண்டன் அதனால்தான் மக்களுக்கு சேவை செய்ய அவர் அரசுடன் இணைந்திருக்கிறார். பதவி பட்டம், உணவு பிள்ளைகளை கொடுப்பவன் படைத்தவன் மனிதனை நம்பி யாரும் வாழ முடியாது தம்பி எம்.ஜி.ஆர் மக்களை தவறான வழிக்கு கொண்டு போகவில்லை தொடர்க உம்பணி வாழ்க வையகம் .

    Reply : 0       0

    Iya Sunday, 12 February 2012 02:30 PM

    திருவாளர் சம்சுதீன் அவர்களே , பியசெனா பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு வாக்களித்த தமிழ் மக்கள்தான் . உங்களுக்கு அது பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது. அந்த மக்களின் கருத்தைத்தான் நான் தெளிவுபட தெரிவித்துள்ளேன் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .