Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் குற்றஞ்சாட்டினார்.
இச்செயற்பாட்டினை கல்முனை மாநகர சபை நிர்வாகமே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாஹ் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கடந்த பெப்ரவரி 04ஆம் திகதி கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற 64ஆவது சுதந்திர தின நிகழ்விற்கு பொதுமக்களினால் கல்முனை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மேயர், பிரதி மேயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த செயலானது கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட 11 பிரதேசங்களில் வாழும் முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ மற்றும் சிங்கள மக்களை புறக்கணிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் சுதந்திர தின வைபவத்திற்கு அழைக்கப்படாததன் பின்னணி என்னவென்பது மறைமுகமாகவே உள்ளது.
இது மாத்திரமல்லாமல் நிர்வாக ரீதியாக இடம்பெறும் நிகழ்வுகளுக்கும் கூட இறுதி நேரத்திலேயே அழைப்பு விடுக்கப்படுகின்றது.
அத்துடன் மாநகர சபை உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் உப குழுக்களை ஒழுங்குமுறையாக ஏற்பாடு செய்யும் சகல நடவடிக்கைகளுக்கும் கல்முனை மாநகர சபை நிருவாகம் அசமந்த போக்கினையே கடைப்பிடித்து வருகின்றது".
செம்பகம் Thursday, 09 February 2012 02:56 PM
இதையெல்லாம் உங்கட கட்சித்தலைவரும் முன்னால் முதல்வரும் என்னத்தங்கையா பார்த்துக் கொண்டிருக்காங்க?
Reply : 0 0
asver Thursday, 09 February 2012 03:38 PM
கல்முனை மாநகரசபை உறுப்பினர்களுக்கு இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு?
Reply : 0 0
namathu man Thursday, 09 February 2012 07:21 PM
முதல்வராக வேண்டும், இல்லாட்டி இப்படிதான், இது தான் உண்மை என்பது இப்பதான்...
Reply : 0 0
kulathooran Thursday, 09 February 2012 10:33 PM
மாநகர ஊழியர்களின் (Employees) வைபவம் என்பதனால்,மாநகர சபை உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை போலும், மேயேரினதும்,சட்டவாதி உதவி மேயேரினதும் கவனத்திக்கு கொண்டுவரவும், இன்னுமொன்று மாநகரின் தென் எல்லை கேட் வே (Gateway) பெயேரிடல் விடயம் பலமுறை மிரர் ஊடாக சுட்டிக்காட்டப்படும் இன்னும் நிர்வாணமாகவே உள்ளது,தாங்களேனும் இவ்விடயத்தில் செயல்படவும்.
Reply : 0 0
raaris Friday, 10 February 2012 01:10 AM
உடனடியாக ஒரு விசாரணை கமிசன் நியமிக்க கட்சி தலைவரிடம் மனு கொடுங்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
7 hours ago