2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் திவிநெகும, கமநெகும, வெள்ளத்தடுப்பு, வீட்டுப் புனர்நிர்மானம் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மேலதிக அரசாங்க அதிபர் அஸங்க அபேவர்த்தன, பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி இணைப்பாளர்கள், திணைங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .