2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரண்டாவது தடவையாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தாதியர்களின் போராட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

15 அம்சக் கோரிக்கைகளை  முன்வைத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த  தாதியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது தடவையாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலை முன்றலில் அக்கரைப்பற்று கிளைச் சங்கத் தலைவர் க.வினோத் தலைமையில் நடைபெற்ற இவ் போராட்டத்தில் தாதியர்கள் பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'சுகாதார அமைச்சே கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தாதியர்களை வேலை நிறுத்தத்திற்கு தூண்டாதே', 'சீருடைக் கொடுப்பனவை 15,000 ரூபாவாக அதிகரி', 'வைத்தியர்களுக்கு வழங்கும் தொலைபேசிக் கொடுப்பனவை எமக்கும் வழங்கு', '2009ஆண்டின் 19ஆவது சுற்றுநிரூபத்தை நடைமுறைபடுத்துவதற்கான தடையை நீக்கு' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் தாதியர்கள் அரை மணித்தியாலயம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அரச தாதியர் சங்கம் நாடளாவிய ரீதியில் 15 அம்சக் கோரிக்கைகளை  முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும்  சுகாதார அமைச்சு இதற்கான உரிய பதிலை வழங்காததை அடுத்து இரண்டாவது தடவையாகவும் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • raaris Friday, 10 February 2012 01:01 AM

    பொறுங்க மக்காள். சுகாதார அமைச்சர் ஆகி உங்கட பிரசினியை சரிபடுத்திரன்.

    Reply : 0       0

    ar Friday, 10 February 2012 11:55 AM

    பாவம் பிள்ளைகள் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகிறது என்று எடுத்து பயிற்சி கொடுத்து சம்பளமும் கொடுத்து கொஞ்சம் வேலை வாங்கினால் திருப்தியாக இல்லையாம் சம்பளம்.
    பேசாமல் ஒப்பந்தத்தின் படி வேலையை வாங்கி விட்டு, வீட்டுக்கு அனுப்பினால் தெரியும் தங்களின் நிலை என்னவென்று.

    Reply : 0       0

    najath Saturday, 11 February 2012 03:44 AM

    அண்ணே எ ஆர் அவர்களே , அவர்கள வீட்டுக்கு அனுப்பினா தெரியும் உங்களைப்போல நோயாளிகளின் நிலை. சும்மா அதட்டாதிங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .