Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளில் நேற்று புதன்கிழமை மழையுடன் கூடிய இடி மின்னல் தாக்கத்தினால் பலர் சிறுகாயங்களுக்குள்ளானதுடன், 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி, கணினி மற்றும் மின்சார உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக சில நாட்களாக இடிமின்னலுடன் கடும் மழை பெய்துவருகின்றது. இந்த நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடிமின்னலுடன் கடும் மழை பெய்ததுடன், திடீரென பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இதன்போது சமயலறையில் கிரைண்டர், மிக்சி போன்றவற்றை பாவித்துக்கொண்டிருந்த பெண்கள் மின்னல் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ளனர். அத்துடன், பல வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள் சேதமடைந்ததுடன், சிறிதுநேரம் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.
பல அரச மற்றும் அரசசார்பற்ற காரியாலயங்களில் கணினி மற்றும் மின்சார உபகரணங்களை பாவித்துக்கொண்டிருந்த பலர் மின்னல் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்டு காயங்களுக்குள்ளாகினர். வீடுகள், காரியாலயங்களிலுள்ள றிச்சுவிச்சுக்கள் செயற்படாமல் போனதுடன், மின்னலின்போது மின்சார உபகரணங்களை பாவித்துக்கொண்டிருந்தமை முதலியன மின்னல் தாக்குதல் ஏற்பட காரணமாகுமென மின்சார சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago