2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்ட கல்முனை மீனவர்கள் நாடு திரும்பினர்

Super User   / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் இந்திய மீனவர் சமூகத்தினரால் காப்பாற்றப்பட்ட கல்முனையை சேர்ந்த நான்கு மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர்.

இம்  மீனவர்கள் கடந்த  15 நாட்கள் இந்திய கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோலரில் வந்த இந்திய மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கன்னியாகுமரி கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த மீனவர்களை தமிழ் நாடு பொலிஸார் பாராமரிப்புக்காக அருட் தந்தை ஜே.சேர்ச்சிலிடம் ஒப்படைத்தனர்.

கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட முயற்சியினால் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாநாயக்க, சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் ஆகியோரின் உதவியுடனேயே இவர் இலங்கை திரும்பியுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த நான்கு மீனவர்களையும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் வரவேற்றனர்.

கல்முனை பிரதேசத்தை சேர்நத அப்துல் றஹீம், இஸ்மாயில் இஸ்மாலெப்பை, எம்.பிச்சி நயிஷ் மற்றும் எம்.ஹசன் பசீர் ஆகியோரே மீட்கப்பட்டவர்களாவர்.


You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Friday, 10 February 2012 01:22 AM

    அமைச்சர் ரிசாட் அவர்களே ? நீங்கள் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லையா ?

    Reply : 0       0

    meenavan Friday, 10 February 2012 01:36 AM

    மீனவர் விடயத்தில் கரிசனையுடன் செயல்பட்டு, அவர்களை நாட்டிக்கு அழைத்துவருவதில் பிரயத்தனம் செய்ததுடன் நில்லாமல், விமான நிலையம் சென்று வரவேற்ற அமைச்சர் ரிஷாத்,கட்சி செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் ஆகியோருக்கு ,மீனவர் குடும்பம் சார்பாக வாஞ்சையுடனான வாழ்த்துகளும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

    Reply : 0       0

    pasha Friday, 10 February 2012 02:15 PM

    இவர்கள் தொடர்ந்து வாக்களிக்கும் கட்சி பிரதிநிதிகள் இவர்கள் விடுதலை விடயத்தில் ஒன்னும் செய்யவில்லையா ?

    Reply : 0       0

    meenavan Friday, 10 February 2012 08:43 PM

    pasha அவர்கள் மாரி கால தவளையை போன்று, தேர்தல் வந்தால் வீர முழக்கம் செய்து, வெற்றியடைந்தவுடன் பணியை முடித்துகொள்வார்கள், அரச சுகபோகங்களையும் அனுபவித்து அமைச்சர் பதவி பெற முயல்வர்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 11 February 2012 04:21 PM

    ரொம்ப நன்றிகள் .எல்லோருக்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .