2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனையில் நிதி ஒழுங்கு முறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
உள்ளூராட்சி மன்றங்களின் முத்திரை தீர்வை உள்ளிட்ட ஏனைய வருமானங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான, நிதி ஒழுங்கு முறைகள் குறித்த கலந்துரையாடல் அமர்வு இன்று கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்காக நடாத்தப்பட்ட இவ் அமர்வு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி வேலைத்திட்டத்தினூடாகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் முத்திரை தீர்வை வருமானம் உட்பட ஏனைய வருமானங்களை உள்ளூராட்சி அமைப்புக்கள் பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதுடன் அதனை தீர்த்துக் கொள்ளும் முறைமை தொடர்பான ஆலோசனைகளும்  முன்வைக்கப்பட்டன.

கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எம்.மயூர கிரிநாதன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஜே.எம். இர்ஷாட், ஆசிய மன்றத்தின் சிரேஸ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன், ஆசியமன்ற கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபு உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • siro Sunday, 19 February 2012 11:17 PM

    கலந்துரையாடல் ரொம்ப நல்லது .
    பிரதி மோயர் இருப்பது போல விளங்குது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .