2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அறநெறிப்பாட ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு இந்து மாமன்றம், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிப்பட்டறையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

ஆலையடிவேம்பு இந்து மாமன்ற கட்டிட மண்டபத்தில் ஓய்வுபெற்ற அதிபரும் இந்து மாமன்ற தலைவருமான வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் விரிவுரையாளர்களாக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்  பண்ணிசைப் பண்டிதர் வி.உதயகுமார், திருக்கோவில் வலயக் கல்வி ஆசிரியர் ஆலோசகர் உலகநாதன், இந்து சமய பாட ஆசிரியர் ஆலோசகர் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.
மாணவர்களுக்கு இந்துசமயநெறியைக் கற்பிப்பது, பண்ணிசை ஓதுவது போன்றவை தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கே.காளிதாசன், ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் எம்.நடராசா, ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதம காணக்காளர் கனகரட்ணம், தம்பிலுவில் திருநாவுக்கரசு குருகுல பணிப்பாளர்
கண.இராசரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .