2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை லயன்ஸ் கழகத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 - சீ௨  இலங்கைக் கிளையின் முதலாவது உதவி ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் மேற்படி  லயன்ஸ் கழகத்தின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும்  முகமாக கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது நலிவுற்ற இசைக் கலைஞர்களை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் கல்முனை சுப்பர் டியூனஸ் இசைக்குழுவின் ஸ்தாபகர் கல்முனை சிவாவுக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இசைக் கருவித் தொகுதியும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன், வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்துக்கு வழங்கப்பட்ட கறவைப் பசுக்களுக்கான கொட்டில் அமைப்பதற்காக 35,000 ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது.

கல்முனை வை.எம்.சீ.ஏ கட்டிடத்தில் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்விலும் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தில் உதவி ஆளுநர் லயன் காமினி எம்.ஜே.எப், ஆளுநர் சபையின் உதவிச் செயலாளர் லயன் அணில் சமரவிக்ரம எம்.ஜே.எப், உதவிப் பொருளாளர் லயன் சிவகுரு சன்முகநாதன், பன்னிப்பிட்டிய மெட்றோ கழகத்தின் தலைவர் விக்கும் சூரியாராச்சி, சம்மாந்துறை கழகத்தின் தலைவர் லயன் எஸ்.எம்.இப்றாலெப்பை, செயலாளர் சட்டத்தரணி அறூஸ், பொருளாளர் பிரதேச செயளாளர் எம்.எம்.நஸீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .