2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினருக்கும், அமானா வங்கி உயர்மட்ட குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடல் அமர்வு நேற்று வைத்தியசாலையிலுள்ள அபிவிருத்திச் சபைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் வைத்தியசாலையின் உள்ளக தேவைகள், விடுதிகளை பராமரிப்பதற்கு அனுசரணை வழங்கல் உட்பட விஷேடமாக வைத்தியசாலையின் 60வது ஆண்டு வைர விழா நிகழ்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்  அமானா வங்கியின் மூலம் இந்நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குதல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போது, அமானா வங்கியின் தலைமைக்காரியாலய முகாமையாளர் (நெற்வேக்) அர்சாத் ஜமால்தீன், கல்முனை அமானா வங்கி கிளையின் முகாமையாளர் எம்.சபீக், கல்முனை அமானா வங்கி கிளையின் நிறைவேற்று அதிகாரி யூ.எல்.அன்வர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயரலாளர் றியாத் ஏ.மஜீத், வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் உப தலைவர் சீ.எம்.ஏ. முனாஸ் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 15 February 2012 08:49 PM

    ரியாத் அதிகமா தமிழ் மிர்ரர்ல வாறார். எலேச்சன் கிலக்சன் கேட்கபோறாரோ?

    Reply : 0       0

    kulathooran Wednesday, 15 February 2012 09:14 PM

    அபிவிருத்தி சபையினருக்கும்,அமானா வங்கி குழுவினருக்கும் இடையேயான கலந்துரையாடலில், வைத்தியர்கள் கலந்துகொள்ளவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .