Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
எரிபொருள் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளதால் தமது விவசாய நடவடிக்கைகளில் தாம் மேலும் கடுமையான நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, விவசாயிகளின் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய முன்வராத நிலையில், தனியார் அரிசி ஆலைகளுக்கு தமது நெல்லினை அடி மட்ட விலைக்கு (மூடை 1100 ரூபாய்) விற்பனை செய்ய வேண்டிய நிலை காரணமாக விவசாயிகள் கடுமையான நஷ்டத்தினை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராகவுள்ள பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கின.
இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில், தற்போது எரிபொருள் விலையேற்றம் காரணமாக நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளது. இதனால், தாம் கடுமையான நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகத் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
agro Friday, 17 February 2012 09:47 PM
சோதனை மேல் சோதனை
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Saturday, 18 February 2012 05:40 PM
மக்களுக்காகத்தான் அரசாங்கம் அரசாங்கதுக்காக மக்கள் அல்ல.
Reply : 0 0
meenavan Saturday, 18 February 2012 08:06 PM
முஸ்லிம் உம்மாவின் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்ட விவசாயிகளில் எத்தனை வீதமானோர் பெறும் உச்ச அறுவடையில், 1/20 ஏழை வரியினை வழங்குகின்றனர்? இந்நிலையில் மழை,வெள்ளம் என்பன இறை சோதனையாக கூட இருக்கலாமல்லவா? அதனுடன் தற்போது எரிபொருள் விலை உயர்வும் சேர்ந்துவிட்டது. பொறுமை காப்போம்.
Reply : 0 0
faarees Monday, 20 February 2012 01:46 AM
ari porul vilaiettraam. makkel அல்லாட்டம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago