2025 ஜூன் 26, வியாழக்கிழமை

எக்ஸ்றே சேவைப் பிரிவுக்கான உபகரணங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின்  சாய்ந்தமருது மாவட்ட  வைத்தியசாலையில் எக்ஸ்றே சேவைப்பிரிவினை ஆரம்பித்து அதற்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் எம்.ரீ.எம்.மர்சூக்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் ஏ.ஸி.யஹ்யாகான், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.ஸீ.ஏ. அஸீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Sunday, 19 February 2012 04:43 PM

    நல்ல முயற்சி, வைத்தியசாலையில் நிகழ்வுகளுக்கு பெரும்பான்மையாக அரசியலாளர்களை அழைப்பதைவிட அத்துறை சார்ந்த வைத்திய உயர் அதிகாரிகளையும், நிபுணர்களையும் அழைத்து ஆலோசனைகளை பெறுவதில், வைத்தியசாலை பொறுப்பதிகாரியும் அபிவிருத்தி குழுவும் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

    Reply : 0       0

    kulathooran Sunday, 19 February 2012 05:11 PM

    மேயேரே இன்னுமா ஆஸ்பத்திரியின் அருகிலுள்ள கேட் வே(Gateway) கண்ணில்படவில்லை, அதற்கு வெள்ளையடித்து 'ஆஸ்பத்திரி அன்புடன் வரவேற்கிறது' என்றாவது எழுதிவிடுங்கள்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Sunday, 19 February 2012 06:25 PM

    ரொம்ப நாளைக்கு அப்புறம் .

    இப்படி எல்லா விடயங்களிலயும் ஒன்னா இருங்கப்பா. இன்னும் நிறைய அபிவிருத்தி பண்ணலாம். எங்க நம்ம ஜமீல் சார காணல்ல.

    Reply : 0       0

    maruthooran Sunday, 19 February 2012 07:28 PM

    குலதூரான் சகோதரரே, நிகழ்வின் சகல போட்டோக்களையும் செய்தியில் போட்டிருந்தால் தங்களின் இக்கேள்வி வந்திருக்காது. நாங்கள் என்னப்பா செய்வது போட்டோகளை பார்த்து கருத்து சொல்வதை நிறுத்துங்கள்.

    Reply : 0       0

    kulathooran Sunday, 19 February 2012 11:46 PM

    maruthooran சகோதரா போட்டோகளை பார்த்து மட்டும் கருத்து சொல்லவில்லை செய்தியையும் படித்தே கருத்து சொன்னேன், ஏழுபேரின் பெயர்களில் வைத்திய சாலை பொறுப்பதிகாரி தவிர்த்து ஒருவர் தானே டாக்டர் மற்றவர் சட்டத்தரணி, ஏனையோர் அரசியலாளர்கள் தானே? அப்படி தானே செய்தி உள்ளது. மாகாண சபை மு.கா.உறுப்பினர் ஜமீலையும் காணோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .