Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது, கபுர் வைத்தியர் வீதியில் அமைந்துள்ள நெனசல விஞ்ஞான தொழில்நுட்ப நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 5 கணினிகள் நேற்று முன்தினம் வெள்ளகிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கட்டிடத்தின் பின்புறமாகவுள்ள கூரை உடைக்கப்பட்டு இக்கொள்ளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்கள் நேற்று சனிக்கிழமை கதவை திறந்து தமது பணிகளை மேற்கொள்ள ஆயத்தமானபோது முன் அறையில் மாணவர்களின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த கணினிகள் காணாமல் போய் இருப்பதும் கூரை உடைக்கப்பட்டிருப்பதையும் அறிந்துள்ளனர்.
கல்முனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***மல்லிகை சிராஜ்***siro Sunday, 19 February 2012 06:19 PM
ரொம்ப நல்லா தேடி பாருங்க .
Reply : 0 0
kulathooran Sunday, 19 February 2012 11:19 PM
நூறு வீத முஸ்லிம்கள் வாழும் ஊரின் மத்திய பகுதியில் இப்படி ஒரு நிகழ்வா? போராளிகளே புறப்படுங்கள் ஊரின் மானம் நிலை நாட்ட. உலமாக்களே உயிர்த்தெழுங்கள்.
Reply : 0 0
shaby Monday, 20 February 2012 04:50 AM
வேலியே பயிரை மேயும் காலம் இது!
Reply : 0 0
pasha Monday, 20 February 2012 03:22 PM
சாய்ந்தமருது கல்முனை பகுதிகளில் வீடு உடைத்து பட்ட பகலில் நகை பணம் கொள்ளை என்ற செய்தி பல முறை கேள்வி பட்டது கொள்ளையர்கள் இன்னும் பிடிபடவில்லையா?
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 21 February 2012 07:32 PM
வழமையா சொல்ற மாதிரிதான். மேலதிக விசாரணைகளை .....................................................................................மேற்கொள்கின் றனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago