Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்ற விவசாயிகளின் துயரினை துடைக்க எந்த ஒரு அரசியல்வாதியும் முன்வருவதில்லை. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று அமைச்சர்களும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் இருந்தும் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதுள்ளதாக தெரிவித்து அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச சபை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அம்பாறை மாவட்டத்தில் காலா காலம் மூவின விவசாயிகள் தமது அறுவடை செய்த நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமப்படுகின்றனர். அரசாங்கமும் உரிய வேளைக்கு நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதுமில்லை.
விவசாயிகள் வெளிச் சந்தையில் நெல்லை விற்பனை செய்து விட்டு இருக்கும் போதே அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும். வெளி சந்தையில் விவசாயிகள் 65.5 கிலோ நிறையுள்ள ஒரு மூடை நெல்லை 1000 ரூபாவுக்கு கொள்வனவு செய்கின்றனர்.
அப்பணத்தை உரிய வேளைக்கு வழங்குவதுமில்லை. இருந்தும் அரிசியின் விலையிலும் எதுவித மாற்றமும் கிடையாது.
இவ்வாறான நிலையில் அம்;பாறை மாவட்டத்தில் மூன்று அமைச்சர்களும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல மாகாண அமைச்சர்களும், உறுப்பினர்களும் இருந்தும் மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை.
இவர்கள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர். அக்ரைப்பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளராக உள்ளமையினால், இது எனது பொறுப்பென உணர்ந்து முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் அமைச்சர்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் கைகூடவில்லை.
எனவே, விவசாயிகளிடம் மீதியாக உள்ள நெல்லை கொள்வனவு செய்யுமாறும் எதிர்வரும் காலங்களில் உரிய வேளைக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய ஆவணம் செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் நான் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.
அத்துடன் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றமையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றார்.
meenavan Monday, 20 February 2012 03:32 AM
நீங்கள் சொல்வது உண்மைதான், குண்டான் சட்டி அரசியல் வல்லுனர்கள் எல்லோரும் மத்திய அரசின் சுகபோகம் அனுபவிப்பதே தலையாய பணியாக கொண்டுள்ள நிலையில், உங்கள் அறிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
Reply : 0 0
சிறாஜ் Monday, 20 February 2012 02:18 PM
ஊரில் இருக்கும் அமைச்சர்கள் என்ன செய்றார்கள்? மக்களின் சுக துக்கம் எல்லாம் இப்ப தேவை இல்லை அரசியல் ஒன்று வந்தால்தான் தேவை போல.
Reply : 0 0
jazeer Monday, 20 February 2012 04:38 PM
நியாயமான நிர்வாகச் சொயற்பாட்டிற்கு உங்களைப் போல ஒருவர் மாத்திரம் போதாது, உங்கள் கருத்துக்களுக்கு பக்பலமாக இருக்க வேண்டியவர்கள் உங்கள் அமைச்சர் அதாஉல்லாதானே.
முதலில் விவசாயிகளுக்கான மாணியங்கள் முறையாக வழங்கப்படுகின்றதா என்று பாருங்கள். ஹக்கீம் சேர் நீங்கள் உங்கள் பிரதேச சபை நிர்வாகத்தை சரியாக்குங்கள்.
Reply : 0 0
hameed Monday, 20 February 2012 04:50 PM
அவர்கள் அரசில் இருப்பது அவர்களின் வாழ்க்கைக்கான விடயம். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. நீங்கள் பிழையாக விளங்கி இருக்கிறீர்கள்.
Reply : 0 0
pottuvilan Monday, 20 February 2012 05:29 PM
உங்களை பாராட்டுகிறோம். உங்கள் துணிச்சலான கருத்து அம்பாறை மாவட்ட மக்களின் கருத்து.
Reply : 0 0
Ithnam Monday, 20 February 2012 06:09 PM
Lankam vivasahikalin thoalan
Reply : 0 0
kamran Monday, 20 February 2012 11:42 PM
அட இவர் பிறந்த நாளில் இருந்து இப்படித்தானே நடக்குது . இப்ப என்ன புதுசா கதை.
சும்மா சொல்லக்கூடாது! நல்ல அரசியல் ஞானம்!
Reply : 0 0
roshan Tuesday, 21 February 2012 03:29 PM
Akkaraipattu is a minicipal council and was it an error stated as pradeshiya sabah.
Reply : 0 0
ahamed Thursday, 23 February 2012 04:25 AM
உண்மையை கூறியமைக்காக, நன்றி
அடுத்து....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago