Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கல்முனை பொது பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளையும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்குவதற்காக கோரப்பட்ட விலை மனு இரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்
குறிப்பிட்டன.
கல்முனை பொது பஸ் நிலையத்திலுள்ள கடைகளை வழங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்முனை தமிழ் வர்த்தக சங்க தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த கடைகளுக்கான விலை மனு கோரலை இரத்து செய்வது. இவற்றுக்கு பதிலாக புதிதாக விலை மனு கோரலொன்றை மேற்கொள்ளல் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.
இதனால் கிழக்கு மாகாண ஆளுநர் ஒய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம நாளை செவ்வாய்க்கிழமை கல்முனைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் பொது பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளையும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கல், தனியார் பஸ் நிலையத்திற்கான அடிக்கல் நடல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாக நாளை செவ்வாய்க்கிழமை கலந்துகொள்ளவிருந்தார்.
யூ.எஸ்.எயி;ட் நிறுனத்தின் நிதியுதவியுடன் 2008ஆம் ஆண்டு கட்டப்பட்ட கல்முனை பொது பஸ் நிலையத்தில் 19 கடைகள் இதுவரை மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை மாநகர சபையின் இன விகிதாரசத்திற்கு ஏற்பட்ட குறைந்த ஐந்து கடைகள் தமிழ் வர்த்தகர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தெரிவித்ததாக முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சாப்பு சட்டத்தின் கீழ் கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது முதல் கல்முனை நகர் சுற்றுவட்டம் வரை, மருதமுனை மற்றும் மற்றம் நற்பட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள கடைகளை வெள்ளிக்கிழமைகளிலும் கல்முனை நகர் சுற்றுவட்டத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் தமிழ் பிரதேச கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளிலும் மூடுவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னர் கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட அனைத்து கடைகளையும் சாப்பு சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் மூடுவது என மேயர் சிராஸ் மீராசஹிப் தீர்மானித்திருந்ததாக கல்முனை மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இக்கூட்டம் தொடர்பில் கல்முனை மேயர் சிராஸ் மீராசஹிபை பலமுறை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை.
Shaby Tuesday, 21 February 2012 05:11 AM
பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அறிவு ஆற்றல் ஆளுமை அனுபவம் எல்லாம் பணத்தினால் சாதிக்க முடியாது!
Reply : 0 0
kulathooran Tuesday, 21 February 2012 12:18 PM
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனவிகிதாசாரம் கல்முனையில் மட்டும் தானா அல்லது கிழக்கு மாகாண சபையில் தொழில் வழங்கலிலும் இந்நிலைபாட்டை பேணுமா? சாப்பு சட்ட விடயம் மேயேரின் தனிப்பட்ட முடிவெனின் நூறு வீதம் முஸ்லிம்களை கொண்ட தம்தூரில் ஐவேளை தொளுகைக்காகவும் கடைகளை மூடும் தீர்மானம் அக்குரணை வர்த்தகர்களை முன்மாதிரியாக கொண்டு ஊர் வர்த்தகர்களுடன் பேசி செய்ய வேண்டும்.
Reply : 0 0
pasha Tuesday, 21 February 2012 02:16 PM
கல்முனை மாநகர 19 கடைகளில் தமிழ் மக்களுக்கு 5 கடைகள் வழங்குவது போல் மருதமுனை சாய்ந்தமருது நட்பிட்டிமுனை மக்களுக்கும் அவர்களது விகிதாசாரப்படி பகிரபடல் வேண்டும்.
Reply : 0 0
செம்பகம் Tuesday, 21 February 2012 04:13 PM
மனு இரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர். ஆனால் மேயர் அவ்வாறு இல்லையென்றும் மறுபரிசீலினை செய்வதாகவும் கூறியிருக்கிராரே. என்னையா இது? எங்களுக்கு ஒன்றுமே விளங்குதில்லை. எது உண்மை ஐயா?
Reply : 0 0
pakalavan Tuesday, 21 February 2012 04:54 PM
பொறுத்திருந்து பார்ப்பம் மலிஞ்சால் சந்தை விவகாரம் சந்தைக்கு வரும் ..........
Reply : 0 0
ummpa Tuesday, 21 February 2012 06:49 PM
விகிதசாரம்! நாங்கள் எல்லாவிடயங்களிலும் இதைதான் கேட்டுகொள்கின்றோம். நீதி அமைச்சர் அவர்களே! உங்களுக்கு இனிதான் வேலைப்பளு கூடும் ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணத்தில் அனைதுவிடைங்களிலும் இந்த விகிதாசாரப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பேசி தீர்வு காணுங்கள்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 21 February 2012 07:30 PM
ஏதோ நல்லது நடந்தா சரி.
Reply : 0 0
meenavan Tuesday, 21 February 2012 07:43 PM
முஸ்லிம் அமைச்சர்களே? தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனவிகிதாசாரம் உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அதை நன்கு பயன்படுத்தி சகல விடயங்களிலும் அதை பெற முயலவும், 23 சதுர கிலோமீட்டர் பரப்பினுள் ஒற்றுமையாக வாழ முடியாமால் இனவிகிதாசாரம் கேட்பவர்களுடன் எப்படியப்பா இணைந்து வாழ முடியும்?.
Reply : 0 0
nalanvirumbi Tuesday, 21 February 2012 09:10 PM
தமிழ் மக்களுக்கு விகிதாசாரம் கேட்கும் அரசியல்வாதிகள் விலைமனு கோரப்பட்டு இறுதிமுடிவு எடுக்கும் வரை எங்கேய் போயிருந்தார்கள். நாட்டில் இருக்கவில்லையா?
Reply : 0 0
nalanvirumbi Tuesday, 21 February 2012 10:19 PM
விலைமனு கோரப்பட்டால் கூடிய விலை வைத்தவருக்குத்தான் கடை கொடுக்கப்படல் வேண்டும் என்பதுதானே நியதி. இதில் என்ன ஐயா மாற்றுக் கருத்து. விலைமனுவில் எப்படி ஐயா விகிதாசாரம் பார்ப்பது. அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஏன் புரயுதில்லை. நடந்து முடிந்ததை விட்டுவிட்டு புதிய கடைத்தொகுதி ஒன்றை உருவாக்குங்கள். இது உங்கள் அரசியல் முதிர்ச்சிக்கு ஒரு சான்றாகும்.
Reply : 0 0
Maravan Tuesday, 21 February 2012 11:25 PM
ஏன் விதண்டாவாதம். தமிழர் என்ன கேட்டலும் அது உங்களுக்கும் தேவை... இதில் என்ன தப்பு.
Reply : 0 0
piththan Wednesday, 22 February 2012 06:20 AM
நம் எல்லோரும் கட்சியினால் பிளவுபடுவதை விட மனிதன் என்ற கட்சியல் ஒன்று சேர்வது சிறந்தது. நான் இப்படி உபதேசம் செய்வது உங்களது மனதை புண் படுத்துமானால் என்னை தயவு செய்து மன்னிக்கவும் காரணம் கட்சியை காரணமாகவைத்து ஒருவரை ஒருவர் புண்படுதுகிறார்கள். பிளவு படுத்துகிறார்கள்.
Reply : 0 0
nalanvirumbi Wednesday, 22 February 2012 04:40 PM
திரு.மாறவன் தமிழர் கேட்டது குற்றமல்ல. விலைமனு கோரப்பட்டு இறுதி முடிவும் எடுக்கப்பட்டு உரிய ஆவணங்களும் தயாராகும் வரை கூட்டணியின் மாநகரசபை உறுப்பினர்கள் எங்கே போயிருந்தார்கள். ஆரம்பத்திலேயே அவர்கள் குறிப்பிட்ட ஐந்து கடைகளுக்கும் தமிழரிடமிருந்து மட்டும் கேள்வியை கோரியிருந்தால் தமிழர்களின் விகிதாசாரத்தை தக்கவைத்திருக்கலாம் அல்லவா.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago