2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தோணியிலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் மரணம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் தோணியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் ஆற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை 13ஆம் பிரிவு ஜி.சி.ரி. வடக்கு வீதியை சேர்ந்த  அட்டாளைச்சேனை தேசிய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் அஸ்ரப் அப்பிலால் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

தனது வீட்டிற்குச் செல்வதற்காக  அட்டாளைச்சேனை 7ஆம் பிரிவு கரையிலிருந்து 13ஆம் பிரிவு கரைக்கு கோணவட்டை ஆற்றினூடாக இம்மாணவன் தனியாக தோணியில் பயணித்துக்கொண்டிருந்தபோது,  தோணியின் துடுப்பு ஆற்றில் தவறி வீழ்ந்துள்ளது.  இதனை எடுப்பதற்கு முயற்சித்தபோதே இம்மாணவன் தோணியிலிருந்து தவறி ஆற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் கூறினர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • pasha Tuesday, 21 February 2012 04:46 PM

    அட்டளைச்சேனை அமைச்சர் அவர்களே நீங்கள் இக்கரையில் இருந்து அக்கறைக்கு பாலம் போட்டு தொனியில் பயணம் செய்வதை நிறுத்துங்கள்.

    Reply : 0       0

    mohamed fowzoon Tuesday, 21 February 2012 04:52 PM

    இன்னலில்லாஹி வைன்ன இலாஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    mohamed fowzoon Tuesday, 21 February 2012 05:00 PM

    இன்னலில்லாஹி வைன்ன இலிஹி ராஜிஊன்

    Reply : 0       0

    razeen Tuesday, 21 February 2012 05:38 PM

    இன்னலில்லாஹி வைன்னைல்லாஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    nanpan.. Tuesday, 21 February 2012 07:06 PM

    இன்னாலில்லாஹி வயின்னா இலாஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 21 February 2012 07:22 PM

    பாஸா
    எப்போவும் இப்படித்தானா? எல்லாத்துக்கும் அமைச்சரை சீண்டாட்டி தின்ற சோறு பத்தியம் இல்லையாக்கும். ஆத்தை கடக்க மூன்று பாலங்கள் உள்ளன. இன்னும் பாலம் தேவை இல்லை.

    Reply : 0       0

    m jaleel/kwt Tuesday, 21 February 2012 08:00 PM

    இன்னாலில்லாஹி வயின்னா இலாஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    meenavan Tuesday, 21 February 2012 08:27 PM

    வருத்தப்படவேண்டிய விடயம். கரையோர பகுதியில் வாழும் தண்ணீரில் நீந்துவதற்குரிய கலையையும் அறிந்திருப்பது அவசியம். இஸ்லாத்தில் தற்காப்பு கலைகளில் நீச்சலை கற்றிருப்பது நல்லது என நூலொன்றில் படித்த ஞாபகம், மார்க்க அறிஞர்களின் தெளிவை அறிய ஆசை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .