2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் நெல் கொள்வனவு சேவை

Kogilavani   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான  நடமாடும் நெல் கொள்வனவு சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு உள்நாட்டு வியாபார அமைச்சு நெல் சந்தைப்படுத்தும் சபைமூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடும் நெல் கொள்வனவு சேவை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க, உதவி பிராந்திய முகாமையாளர் கே.ஏ.பிரியந்த புஸ்பகுமார ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நடமாடும் நெல் கொள்வனவு சேவை  நிந்தவூர், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலும் நடைபெற்று வருவதாக பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.ஏ.ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்நடமாடும் சேவையில் சம்பா 1கிலோ 30 ரூபாவாகவும்  நாடு 1கிலோ 28 ரூபாவாகவும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .