Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக விவசாயிகளும் பொதுமக்களும் கவலையும் அச்சமும்தெரிவிக்கின்றனர்.
இந்த நிலமையினால் பெரும் போகத்தில் செய்கை பண்னப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில்பெரும்பாலான நெற்காணிகளை நாசப்படுத்தி இருப்பதாகவும்; தெரிவிக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி கரையோரக் கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு வந்து அங்கு செய்கை பன்னப்பட்டுள்ள பயிர்களை அழித்து வருவதுடன் வேலிகள் மற்றும் மதில் சுவர்களை சாய்த்து விட்டு செல்கின்றதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த காட்டு யானைகளின் மாலை 5 மணிக்கு முன்னதாகவே காடுகளிலிருந்து வெளியாகி; மறுநாள் காலை 8, 9 மணிவரைக்கும் அட்டகாசம் புரிந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த அட்டகாசத்திலிருந்து தமது கிராமத்தையும், பாயிர்களையும் பாதுகாப்பதற்காக நித்திரையின்றி விடியும் வரை காவலில் இருந்தும் சிலசமயம் தமது உயிரைப் பறித்த சம்பவங்களும் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான நிகழ்வுகளுக்கு மத்தியில் வேறு மாவட்டங்களில் இருந்து பிடிக்கப்பட்ட யானைகள் சிலவற்றை லொறிகளில் கொண்டு வந்து இரவு நேரங்களில் அம்பாறை மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் இறக்கிவிட்டு சென்றுள்ள சம்பவங்களையும் நேரடியாக கண்ணுற்றதாக சில விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago