2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அதிபர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் மாற்றப்பட்டமையைக் கண்டித்தும், மீண்டும் தமது பழைய அதிபரை நியமிக்கக் கோரியும் கல்லூரியின் மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை காலை தொழில்நுட்பக் கல்லூயின் முன்னாலுள்ள பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபராக கடமையாற்றி வந்த ஏ.ஜி. தாவூத் என்பவர் தற்போது குறித்த பதிவியிலிருந்து நீங்கப்பட்டுள்ளதோடு, அந்த இடத்துக்கு முஹம்மட் ஹசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்தே மாணவர்களால் மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு, தமது பழைய அதிபரை மீண்டும் நியமிக்குமாறு கோசங்களை எழுப்பியதோடு, சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • umar raheem Saturday, 25 February 2012 01:18 PM

    அரசியல் நன்றாக வேலை செய்கிறது !

    Reply : 0       0

    sam Saturday, 03 March 2012 06:20 AM

    தேங்க்ஸ் இனிதான் இந்த கல்லூரிக்கு நல்லகாலம் பிறக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .