2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் மண்ணெண்ணெய் நிவாரண முத்திரை வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 


(ஹனீக் அஹமட்)

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1933 வறிய குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய் நிவாரண முத்திரைகளை வழங்கும் நிகழ்வு நேற்று ஆலயடிவேம்பு பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான நிவாரண முத்திரைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது ஒவ்வொரு பயனாளிக்கும் மாதமொன்றுக்கு 200 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கான நிவாரண முத்திரைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே. நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.      

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .